tamilni 57 scaled
உலகம்செய்திகள்

பற்றியெரியும் மத்திய கிழக்கு… செங்கடலில் மூழ்கும் பிரித்தானிய சரக்கு கப்பல்

Share

பற்றியெரியும் மத்திய கிழக்கு… செங்கடலில் மூழ்கும் பிரித்தானிய சரக்கு கப்பல்

ஈரானிய ஆதரவு ஹவுதிகளால் தாக்குதலுக்கு இலக்கான பிரித்தானிய சரக்கு கப்பல் ஒன்று செங்கடலில் மூழ்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் Khor Fakkan பகுதியில் இருந்து பல்கேரியாவின் வர்ணா பகுதிக்கு புறப்பட்டு சென்ற Rubymar சரக்கு கப்பலானது ஏமன் கடற்பகுதியில் ஹவுதிகளின் தாக்குதலுக்கு இலக்கானது.

தொடர்புடைய கப்பலின் ஊழியர்கள் பத்திரமாக மீட்கபட்டாலும், அந்த கப்பலை கைவிடும் நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சுமார் 2 வாரங்களுக்கு முன்னர் நடந்த இந்த தாக்குதலில் சேதமடைந்துள்ள Rubymar சரக்கு கப்பல் தற்போது மூழ்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானிய ராணுவத்தினரே, கப்பல் ஊழியர்களை மீட்டுள்ள நிலையில், கப்பலை கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளது என்றே பிரித்தானியாவின் UKMTO அமைப்பு குறிப்பிட்டிருந்தது.

இதனிடையே, ஹவுதிகளின் ராணுவ செய்தித் தொடர்பாளர் Yahya Saree விடுத்த அறிக்கையில், Rubymar சரக்கு கப்பல் மிக மோசமாக சேதமடைந்துள்ளதாகவும், மூழ்கும் அபாயம் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

காஸா பகுதியில் இஸ்ரேலின் கன்மூடித்தனமான தாக்குதலுக்கு பதில் அளிக்கும் வகையிலேயே செங்கடல் தாக்குதலை முன்னெடுப்பதாக ஹவுதிகள் அறிவித்திருந்தனர்.

இதனால் பெரும் எண்ணிக்கையிலான சரக்கு கப்பல்கள் பாதை மாறி பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதுடன், முதன்மையான நிறுவனங்கள் பல சேவையை நிறுத்திக் கொண்டது.

இதனால், Suzuki, Tesla, BP, Shell, Qatar Energy, DHL, FedEx, Adidas, Marks & Spencer, Next, Primark, Sainsbury’s, மற்றும் Target உள்ளிட்ட நிறுவனங்கள் பாதிப்பை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் உலகளாவிய கப்பல் கொள்கலன்களின் கட்டணம் நவம்பர் மற்றும் ஜனவரி மாதங்களுக்கு இடையில் 300 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

மட்டுமின்றி, கப்பல் போக்குவரத்து மீதான ஹவுதிகளின் தாக்குதல்களை நிறுத்துவதற்காக பிரித்தானியாவும் அமெரிக்காவும் சமீப வாரங்களாக கூட்டு வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

Share
தொடர்புடையது
image 1200x800 14 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்குத் தடுப்புக்காவல்! – நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் நீதிமன்றில் திரண்டனர்!

சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...

images 1 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: இரு பொலிஸ் அதிகாரிகள் கைது! – தலைமையகம் அதிரடி நடவடிக்கை!

கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, தமது...

image 1200x800 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீகிரியாவில் சோகம்: காட்டு யானை தாக்கியதில் ஹங்கேரி நாட்டுச் சுற்றுலாப் பயணி பலி!

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலமான சீகிரியா மற்றும் பிதுரங்கலை மலைக்கு இடைப்பட்ட காட்டுப்பகுதியில், காட்டு...

image 1200x800 35
செய்திகள்இலங்கை

ஓய்வுக்காலத்தின் சொர்க்கபுரி இலங்கை! – 2026-இல் உலகின் மிக மலிவான நாடாக முதலிடம்; ‘Travel + Leisure’ புகழாரம்!

உலகின் முன்னணி பயண மற்றும் வாழ்க்கைமுறை சஞ்சிகையான ‘Travel + Leisure’, 2026-ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற...