wsaas scaled
உலகம்செய்திகள்

புலம்பெயர்ந்தோர் தொடர்பாக பிரித்தானியாவின் புதிய அரசாங்கம் எடுத்துள்ள முடிவு

Share

புலம்பெயர்ந்தோர் தொடர்பாக பிரித்தானியாவின் புதிய அரசாங்கம் எடுத்துள்ள முடிவு

பிரித்தானியாவின் புதிய அரசாங்கமான தொழிலாளர் அரசாங்கம் (Labour Party) 60,000 சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை நாட்டுக்குள் அனுமதிக்க தீர்மானித்துள்ளது.

பிரித்தானியாவின் புதிய பிரதமர் கெய்ர் கெய்ர் ஸ்டார்மரின் (Keir Starmer) புதிய குடியேற்றத் திட்டங்களின் கீழ் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய கொன்சர்வேடிவ் (Conservative Party) அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ருவாண்டா நாடு கடத்தல் திட்டத்தை கைவிடுவதே புதிய தொழிலாளர் அரசாங்கத்தின் முதல் முடிவுகளில் ஒன்றாக இருந்தது.

முன்னாள் பிரதமர் போரிஸ் ஜொன்சன் (Boris Johnson) அறிமுகப்படுத்திய இந்த திட்டத்தின் படி, புலம்பெயர்ந்தோர் ஆபிரிக்க நாடான ருவாண்டாவுக்கு அனுப்பப்படுவர்.

போரிஸ் ஜொன்சன் பிரதமர் பதவியிலிருந்து விலகிய பின்னர், புதிய பிரதமராக பதவியேற்ற ரிஷி சுனக்கின் (Rishi Sunak) ஆட்சிக் காலத்திலும் ருவாண்டா திட்டம் பெரும் பேசுபொருளாக மாறியிருந்தது.

ஆங்கில கால்வாய் வழியாக சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தோர் வருவதை தடுக்க இந்த திட்டம் உதவும் என அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், இப்போது, ஸ்டார்மரின் தொழிலாளர் அரசாங்கம் சுமார் 90,000 சட்டவிரோத புலம்பெயர்ந்தோரின் புகலிட விண்ணப்பங்களை விரைவாகக் கண்காணிக்கத் தயாராக உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இவற்றில் சுமார் 60,000 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இதில் இந்திய பெருங்கடலின் டியாகோ கார்சியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 60இற்கும் மேற்பட்ட  இலங்கை தமிழர்களும் உள்ளடக்கப்படுவார்களா என்பது குறித்தும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...