4 6
உலகம்செய்திகள்

வரலாற்றில் முதற் தடவையாக பிரிட்டன் உளவு அமைப்புக்கு பெண் தலைவர் நியமனம்

Share

ஐரோப்பிய நாடான பிரிட்டனின் உளவு அமைப்பான “எம்.ஐ.6 (MI6) “இன் தலைவராக, பெண் ஒருவர் முதல் முறையாக நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த எம்.ஐ.6 உளவு அமைப்பின் தலைவர் பதவியை, ‘சி’ என்று குறிப்பிடுவர். இந்தப் பதவியில் உள்ளவர் பெயர் மட்டுமே வெளியுலகுக்கு தெரியும்.

ஆனால், அந்த அமைப்பின் மற்ற பதவிகளில் உள்ளவர்கள் பெயர்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்படுகின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த அமைப்பின் தற்போதைய தலைவராக உள்ள சர் ரிச்சர்ட் மூரே (Sir Richard Moore), விரைவில் ஓய்வு பெற உள்ள நிலையில், உளவு அமைப்பின் தொழில்நுட்ப பிரிவு தலைவராக உள்ள 47 வயதான பிளேசி மெட்ரவெலி (Blaise Metreweli) புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

‘எம்.ஐ.,6’-உளவு அமைப்பின் 116 ஆண்டு கால வரலாற்றில், பெண் ஒருவர் தலைவராக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இவர் இதற்கு முன்னர் உள்நாட்டு பாதுகாப்பை கவனிக்கும் எம்.ஐ.- 5 உளவு அமைப்பின் தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார்.

புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள பிளேசி மெட்ரவெலி, கடந்த 1999 முதல் உளவு அமைப்பில் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Screenshot 2025 12 22 110737 1170x800 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைக்கவசம் இன்றி அதிவேகப் பயணம்: மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து – வாலிபர் பலி, சிறுவன் உட்பட நால்வர் காயம்!

யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர்...

IMG 2581 1170x658 1
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி எங்கள் சொத்து; விகாரையை அகற்று – யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கண்டனப் போராட்டம்!

யாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் அமையப்பெற்றுள்ள விகாரையை அகற்றக் கோரியும், அங்கு இடம்பெறும் நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும்...

images 2 7
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் ஏற்றுமதித் துறையில் பாரிய வளர்ச்சி: 11 மாதங்களில் 15,776 மில்லியன் டொலர் வருமானம்!

இலங்கையின் ஏற்றுமதித் துறை 2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் (ஜனவரி – நவம்பர்)...

603890102 1355544646614961 2421916803890790440 n
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறை கடற்கரையில் இரு பெரிய கடல் ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுக்கம்!

அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை மற்றும் கல்முனை இடைப்பட்ட கடற்கரைப் பகுதிகளில் இன்று (22) மதியம் இரண்டு...