பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மரின் (Keir Starmer) மிகவும் நம்பிக்கைக்குரிய அதிகாரியும், அவரது தலைமைத் தளபதியுமான (Chief of Staff) மோர்கன் மெக்ஸ்வீனி (Morgan McSweeney) தனது பதவியிலிருந்து விலகியுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவுக்கான முன்னாள் பிரித்தானிய தூதுவர் லோர்ட் மண்டெஸ்லோன் (Lord Mandelson) உடனான தொடர்பு அம்பலமானதையடுத்து, அவர் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சர்ச்சைக்குரிய அமெரிக்க நிதியாளர் ஜெப்ரி எப்ஸ்டீனுடன் லோர்ட் மண்டெஸ்லோன் நெருக்கமான தொடர்புகளைப் பேணி வந்ததாகப் பலத்த குற்றச்சாட்டுகள் நிலவி வருகின்றன. எப்ஸ்டீன் தொடர்பான ரகசிய ஆவணங்கள் மற்றும் விசாரணைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அவருடன் தொடர்பிலிருந்த நபர்களுடன் மெக்ஸ்வீனி கொண்டிருந்த உறவு பிரதமர் அலுவலகத்திற்குப் பெரும் அரசியல் நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளது. இந்தப் பின்னணியிலேயே, அரசாங்கத்தின் நற்பெயரைப் பாதுகாக்கும் நோக்கில் மோர்கன் மெக்ஸ்வீனி பதவி விலகியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.