1770515691 MADEL 6
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நாடு தழுவிய ரீதியில் கரைவலை கடற்றொழிலாளர்கள் பணிப்புறக்கணிப்பு: கொழும்பில் தொடரும் போராட்டம்

Share

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து கரைவலை கடற்றொழிலாளர்களும் இன்று (09) முதல் தமது தொழில் நடவடிக்கைகளிலிருந்து காலவரையறையின்றி விலகிச் செயற்படத் தீர்மானித்துள்ளனர். கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தமது கோரிக்கைகளுக்கு முறையான தீர்வு வழங்கப்படவில்லை எனக் குறிப்பிட்டு, கடந்த 05 ஆம் திகதி முதல் கரைவலை கடற்றொழிலாளர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகத் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். ஐந்தாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தப் போராட்டத்தின் ஒரு கட்டமாகவே, இன்று முதல் நாடு தழுவிய ரீதியில் தொழிலைப் புறக்கணிப்பதாகக் கடற்றொழிலாளர் சங்கங்கள் அறிவித்துள்ளன. அரசாங்கம் இவ்விடயத்தில் உரிய தலையீட்டை மேற்கொண்டு தமக்கான தீர்வைப் பெற்றுத் தரும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
05 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டிகைக் காலத்தில் இணைய மோசடிகள் அதிகரிப்பு: எச்சரிக்கையுடன் இருக்குமாறு இலங்கை கணினி அவசர பிரிவு அறிவுறுத்தல்!

எதிர்வரும் பண்டிகைக் காலங்களை முன்னிட்டு, இணையத்தில் பகிரப்படும் போலியான விளம்பரங்கள் மற்றும் இணைப்புகள் (Links) மூலம்...

04 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சி: 2026-ஆம் ஆண்டில் 600,000 சுற்றுலாப் பயணிகளைக் கடந்த சாதனை!

இலங்கையின் சுற்றுலாத்துறை இந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே பெரும் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...

03 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல பகுதிகளில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதிய வானிலை அறிக்கையின்படி, இன்று (மார்ச் 13) நாட்டின் பல...

02 12
செய்திகள்உலகம்

பனிமலை ஏறும் போது நிலைதடுமாறி சரிந்த மலையேற்ற வீரர்: வைரலாகும் திக் திக் காட்சிகள்

உலகின் மிக உயரமான சிகரங்களை நோக்கிய மலையேற்றப் பயணங்கள் சாகசம் நிறைந்ததாக இருந்தாலும், அவை எந்த...