11 21
உலகம்செய்திகள்

ஹமாஸ் அமைப்பின் சுரங்கப்பாதையில் பிரித்தானியரின் சடலம் மீட்பு

Share

ஹமாஸ் அமைப்பின் சுரங்கப்பாதையில் பிரித்தானியரின் சடலம் மீட்பு

ஹமாஸ் படைகளின் சுரங்கப்பாதையில், துப்பாக்கி குண்டு காயங்களுடன் பிரித்தானியர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த பிரித்தானியருடன் மேலும் ஐந்து இஸ்ரேலிய பணயக்கைதிகளின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

அனைவரும் காசா பகுதியில் வைத்து படுகொலை செய்யப்படிருக்கலாம் என்றே முதற்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

நிலப்பரப்பில் இருந்து 30 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதையில் இருந்து இஸ்ரேலிய படைகள் அந்த சடலங்களை மீட்டுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை ஹமாஸ் சுரங்கப்பாதைக்குள் அதிரடியாக நுழைந்த இஸ்ரேலிய இராணுவம், சடலங்களுடன் ஹமாஸ் படைகளின் ஆயுதக் குவியலையும் மீட்டுள்ளது.

51 வயதான பிரித்தானியர் Nadav Popplewell கடந்த ஒக்டோபர் மாதம் நடந்த தாக்குதலில் ஹமாஸ் படைகளால் கைது செய்யப்பட்டார். இவரது சகோதரி பல மாதங்களாக இவரின் விடுதலைக்காக போராடி வந்துள்ளார்.

மேலும், நவம்பர் மாதம் முன்னெடுக்கப்பட்ட போர் நிறுத்த நடவடிக்கையின் போது 79 வயதான இவரது தாயார் விடுவிக்கப்பட்டதோாடு, இன்னொரு சகோதரர் ஒக்டோபர் தாக்குதலின் போது கொல்லப்பட்டார்.

இந்நிலையில் தரவுகளின் அடிப்படையில், தற்போது 109 பேர் ஹமாஸ் பிடியில் உள்ளனர். இருப்பினும் ஆய்வாளர்கள் தரப்பு தெரிவிக்கையில், வெறும் 50 பேர் மட்டுமே தற்போது உயிருடன் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...