24 662ec1c7d65f2
உலகம்செய்திகள்

பிரித்தானியாவிற்கு பேரிடி: நான்கே மாதங்களில் அதிகரித்த குடியேறிகள்

Share

பிரித்தானியாவிற்கு பேரிடி: நான்கே மாதங்களில் அதிகரித்த குடியேறிகள்

கடந்த ஆண்டுகளை விடவும் பிரித்தானியாவில் இவ்வருடம்(2024) சிறிய படகுகள் மூலம் குடியேறியவர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 4 மாதங்களில் பிரித்தானியாவில் குடியேறியவர்களின் எண்ணிக்கை எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது.

அதன் படி, இந்த நான்கு மாதங்களில் மாத்திரம் பிரித்தானியாவிற்குள் ஆபத்தான முறையில் படகுகளின் மூலம் 7,167 க்கும் மேற்பட்டவர்கள் இங்கிலீஷ் கால்வாயை கடந்து குடியேறியுள்ளனர்.

அத்தோடு, கடந்த 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு படகு மூலம் குடியேறியவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, பிரித்தானியாவிற்குள் சட்டவிரோதமான முறையில் குடியேறுபவர்களை ருவாண்டாவுக்கு அனுப்பும் சர்ச்சைக்குரிய திட்டம் ஏற்கனவே நடைமுறைபடுத்தப்பட்டு வருவதாக பிரதமர் ரிசி சுனக் தெரிவித்திருந்தார்.

அதன்போது, பிரதமர் ரிசி சுனக், குடியேற விரும்புபவர்கள் அதிகமாக சட்டவிரோதமாகவே பிரித்தானியவிற்கு நுழைய விரும்புகிறார்கள் என்றும் அவர்கள் ருவாண்டாவுக்கு அனுப்பப்படுவார்கள் என்பது அறிந்திருப்பதால் இந்த திட்டம் பயனுள்ளதாகவிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
1529934317 gun gunshot 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பத்தரமுல்லையில் பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு! – ஜீப் வாகனத்தில் இருந்த தம்பதியினர் மர்மமான முறையில் சுட்டுக்கொலை!

கொழும்பு – பத்தரமுல்லை, அக்குரேகொட பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் தம்பதியினர்...

25 679d968d808df
இலங்கைசெய்திகள்

18 ஆண்டுகால நீதிப் போராட்டம்: வஸ்கடுவ கொலை வழக்கில் மூவருக்கு மரண தண்டனை!

குடா வஸ்கடுவ பகுதியில் 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற நபர் ஒருவரின் படுகொலை தொடர்பான வழக்கில்,...

26 69858a214d488
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இரசாயனப் பொருளை சுவாசித்த 19 பேர் பாதிப்பு! – மொரட்டுவை பாடசாலை மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!

மொரட்டுவை பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இன்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வக சோதனையின் போது, வெளியேறிய இரசாயனப்...

1770972444 seine 6
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன் 9-வது நாளாக மீனவர் போராட்டம்! – தீர்வு காண ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு!

கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக, கொளுத்தும் வெயிலையும் பாரிய மழையையும் பொருட்படுத்தாது மீனவர்கள் முன்னெடுத்து...