24 662ec1c7d65f2
உலகம்செய்திகள்

பிரித்தானியாவிற்கு பேரிடி: நான்கே மாதங்களில் அதிகரித்த குடியேறிகள்

Share

பிரித்தானியாவிற்கு பேரிடி: நான்கே மாதங்களில் அதிகரித்த குடியேறிகள்

கடந்த ஆண்டுகளை விடவும் பிரித்தானியாவில் இவ்வருடம்(2024) சிறிய படகுகள் மூலம் குடியேறியவர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 4 மாதங்களில் பிரித்தானியாவில் குடியேறியவர்களின் எண்ணிக்கை எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது.

அதன் படி, இந்த நான்கு மாதங்களில் மாத்திரம் பிரித்தானியாவிற்குள் ஆபத்தான முறையில் படகுகளின் மூலம் 7,167 க்கும் மேற்பட்டவர்கள் இங்கிலீஷ் கால்வாயை கடந்து குடியேறியுள்ளனர்.

அத்தோடு, கடந்த 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு படகு மூலம் குடியேறியவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, பிரித்தானியாவிற்குள் சட்டவிரோதமான முறையில் குடியேறுபவர்களை ருவாண்டாவுக்கு அனுப்பும் சர்ச்சைக்குரிய திட்டம் ஏற்கனவே நடைமுறைபடுத்தப்பட்டு வருவதாக பிரதமர் ரிசி சுனக் தெரிவித்திருந்தார்.

அதன்போது, பிரதமர் ரிசி சுனக், குடியேற விரும்புபவர்கள் அதிகமாக சட்டவிரோதமாகவே பிரித்தானியவிற்கு நுழைய விரும்புகிறார்கள் என்றும் அவர்கள் ருவாண்டாவுக்கு அனுப்பப்படுவார்கள் என்பது அறிந்திருப்பதால் இந்த திட்டம் பயனுள்ளதாகவிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...