63 உயிர்களை பலி வாங்கிய படகு விபத்து! 
உலகம்செய்திகள்

63 உயிர்களை பலி வாங்கிய படகு விபத்து! 

Share

63 உயிர்களை பலி வாங்கிய படகு விபத்து!

ஸ்பெயினின் கேனரி தீவுகளை நோக்கி பயணித்த படகு விபத்திற்குள்ளானதில் 63 பேர் பலியாகியுள்ளனர்.

செனகல் நாட்டைச் சேர்ந்த 63 பேர் படகு ஒன்றில் பயணித்துள்ளனர். இந்த படகு மேற்கு ஆப்பிரிக்க கடற்கரையில் இருந்து ஸ்பானிஷின் கேனரி தீவுகள் நோக்கி சென்றுள்ளது.

இந்த நிலையில் குறித்த படகு கேப் வெர்டே தீவு அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கவிழ்ந்துள்ளது.

இதில் படகில் பயணித்த அனைவரும் மூழ்கி இறந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

மூழ்கியவர்களில் 56 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 7 பேரின் உடல்களை தேடி வருவதாக ஐ.நாவின் சர்வதேச அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

முதற்கட்ட விசாரணையில் பாதுகாப்பு உபகரணம் இல்லாததால் இந்த உயிர்சேதம் ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.

இதற்கிடையில் புலம்பெயர்வுக்காக செனகல் மக்கள் கேனரி தீவுக்கு பயணித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...