8 scaled
உலகம்செய்திகள்

தேர்தலுக்கு முந்தைய நாள்… 24 பேர்களை பலிவாங்கிய இரட்டை குண்டுவெடிப்பு

Share

தேர்தலுக்கு முந்தைய நாள்… 24 பேர்களை பலிவாங்கிய இரட்டை குண்டுவெடிப்பு

பாகிஸ்தானில் வியாழக்கிழமை பொதுத்தேர்தல் முன்னெடுக்கப்படவிருக்கும் நிலையில், தேர்தலில் போட்டியிடும் இருவரது அலுவலகங்களுக்கு அருகாமையில் வெடிகுண்டு தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறைந்தது 24 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் டசின் கணக்கானோர் காயங்களுடன் தப்பியதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம், தேர்தல் நாளில் பாதுகாப்பு தொடர்பில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீப மாதங்களில் தீவிரவாத தாக்குதல், கடும் பொருளாதார சிக்கல் மற்றும் நாட்டின் முக்கிய தலைவரும் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் சிறையில் அடைப்பு உள்ளிட்ட நெருக்கடிகளுக்கு மத்தியில் பாகிஸ்தான் வியாழக்கிழமை பொதுத்தேர்தலை எதிகொள்ள இருக்கிறது.

இந்த நிலையில், இரண்டு இடங்களில் வெடிகுண்டு வெடித்துள்ளதை அடுத்து பாதுகாப்பை பலப்படுத்துவோம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pishin மாவட்டத்தில் முதல் வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. இதில் 14 பேர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இரண்டாவது தாக்குதலானது ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள Qilla Saifullah பகுதியில் நடந்துள்ளது.

இதில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னனியில் இருப்பவர்கள் தொடர்பில் தகவல் ஏதும் வெளியாகவில்லை.

 

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

23 2
இலங்கைசெய்திகள்

விரயமாகும் இறக்குமதி செய்யப்பட்ட உப்பு.. கடும் நெருக்கடியில் அரசாங்கம்!

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு, துறைமுகத்தில் உள்ள சில கொள்கலன்களில் இருந்து உருகி வெளியேறி வருவதாக கொள்கலன்...