4 34
உலகம்செய்திகள்

உக்ரைனுடனான எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தும் ரஸ்யாவின் நட்பு நாடு

Share

உக்ரைனுடனான எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தும் ரஸ்யாவின் நட்பு நாடு

உக்ரைனுடனான (Ukraine) எல்லை பகுதிகளில் ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரஸ் (Belarus), பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஸ்யா மீதான தாக்குதல்களை உக்ரைன் தொடர்ந்து நடத்தி வரும் நிலையில், எந்நேரத்திலும் பெலாரஸுக்கு ஆபத்து ஏற்படலாம் என்னும் நோக்கிலேயே அந்நாட்டு ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ இந்த முடிவை எடுத்துள்ளார்.

இதற்கமைய, தனது நாட்டின் ஆயுதப் படைகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியை உக்ரைன் எல்லைக்கு அனுப்பியதாகக் கூறியுள்ளார்.

மேலும், தற்போது படைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அந்நாட்டின் தெற்கு எல்லையில் அப்படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.

இதன்படி, விமானங்கள், விமானத் தடுப்பு ஏவுகணைகள், தொழில்நுட்ப வீரர்கள் பிரிவு உட்பட ஒரு தாக்குதல் நடந்தால் எதிர்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உக்ரைனின் தாக்குதலில் இருந்து நாட்டை பாதுகாப்பதற்காக சுமார் 120,000 வீரர்களை எல்லைக்கு அனுப்பியுள்ளதாக லுகாஷென்கோ குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...