குடியரசாக மாறிய பார்படாஸ்!

Barbados

பார்படாஸ் குடியரசாக மாறியுள்ளது.

இதுவரை அரச தலைவர் பதவியில் இருந்து பிரிட்டன் மகாராணி எலிசபெத்தை பார்படாஸ் நீக்கியுள்ளதோடு அதன் முதல் ஜனாதிபதியுடன் ஒரு புதிய குடியரசாக கரிபியன் தீவான பார்படாஸ் உருவிடுத்துள்ளது.

கரீபியன் தீவுக்கு முதல் ஆங்கிலக் கப்பல்கள் வந்து ஏறக்குறைய 400 ஆண்டுகளுக்குப் பின்னர் அதன் கடைசி எஞ்சிய காலனித்துவ பிணைப்புகளை பார்படாஸ் துண்டித்துள்ளது.

தலைநகர் பிரிட்ஜ்டவுனில் உள்ள சேம்பர்லைன் பாலத்தில் நூற்றுக்கணக்கான மக்களின் ஆரவாரத்துடன் புதிய குடியரசான பார்படாஸ் வரவேற்றது.

ஹீரோஸ் சதுக்கத்தில் பார்படாஸின் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது 21 துப்பாக்கி தோட்டாக்கள் சுடப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது.

பிரிட்டன், அவுஸ்திரேலியா, கனடா மற்றும் ஜமைக்கா உள்ளிட்ட 15 பிற நாடுகளுக்கும் இன்னும் ராணியாக இருக்கும் இரண்டாம் எலிசபெத் இன் காலனித்துவ வரலாற்றினை முறித்துக் கொண்ட இறுதி நாடாக பார்படாஸ் மாறியுள்ளது.

பார்பேடியனின் முதல் ஜனாதிபதியாக சாண்ட்ரா மேசன் பதவியேற்றுள்ளார் என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

#world

Exit mobile version