rtjy 43 scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேலுடன் இருந்த உறவை முறித்துகொண்ட அரபு நாடு

Share

இஸ்ரேலுடன் இருந்த உறவை முறித்துகொண்ட அரபு நாடு

இஸ்ரேலுடனான உறவை முறித்துக்கொள்ளும் நோக்கில் இஸ்ரேலுக்கான தமது தூதரை திரும்ப பெருவதாக பஹ்ரைன் அறிவித்துள்ளது.

இந்நிலையில் பஹ்ரைனுக்கான இஸ்ரேலிய தூதர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும் இஸ்ரேலுடனான பஹ்ரைனின் பொருளாதார உறவுகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது.

காசா மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே பஹ்ரைன் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.

கடந்த அக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினர் மேற்கொண்ட தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தும் நோக்கில் இன்று வரை இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது.

போர் நிறுத்தம் குறித்து ஐ.நா உட்பட பல்வேறு நாடுகள் இஸ்ரேலுக்கு கோரிக்கை விடுத்தாலும் இஸ்ரேல் பிரதமர் அதனை பொருட்படுத்தவில்லை.

காசாவில் இஸ்ரேல் நடத்தும் இந்த தாக்குதல் குறித்து பல்வேறு அரபு நாடுகள் கோபத்தில் இருந்தாலும் தற்போது பஹ்ரைன் மட்டுமே தன்னுடைய மொத்த உறவை துண்டித்துள்ளது.

இதேபோல் தென் அமெரிக்க நாடான ஒலிவியாவும் இஸ்ரேலுடனான உறவை துண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....