1 1 2 scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேலுடனான உறவை துண்டித்த வளைகுடா நாடு: தூதரக அதிகாரிகளையும் வெளியேற்ற முடிவு

Share

இஸ்ரேலுடனான உறவை துண்டித்த வளைகுடா நாடு: தூதரக அதிகாரிகளையும் வெளியேற்ற முடிவு

இஸ்ரேல் – ஹமாஸ் போர் பாலஸ்தீன மக்களை கொத்தாக பலி வாங்கி வரும் நிலையில், இஸ்ரேலுடனான வர்த்தக உறவுகளை துண்டித்துக் கொண்டுள்ளது முக்கிய வளைகுடா நாடான பஹ்ரைன்.

இஸ்ரேலுடனான பொருளாதார உறவுகளை மொத்தமாக நிறுத்துவதாக பஹ்ரைன் நாடாளுமன்றத்தின் கீழ்சபை வியாழக்கிழமை அறிவித்தது. அத்துடன் தங்கள் நாட்டுக்கான இஸ்ரேல் தூதரக அதிகாரிகளை வெளியேற்றவும், தங்கள் தூதரக அதிகாரிகளை திரும்ப அழைக்கவும் முடிவு செய்துள்ளது.

இஸ்ரேலுக்கான தூதர அதிகாரிகள் அனைவரையும் திரும்ப அழைத்துள்ளதை ஏற்கனவே பஹ்ரைன் உறுதி செய்திருந்தாலும், வர்த்தகம் தொடர்பில் தற்போது முடிவை அறிவித்துள்ளது.

ஆனால், இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம், இது தொடர்பில் பஹ்ரைன் தரப்பில் எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இந்த நடவடிக்கையானது பாலஸ்தீன விவகாரம் தொடர்பிலும் பாலஸ்தீன மக்களின் நியாயமான உரிமைகளுக்கு ஆதரவாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பஹ்ரைன் நாடாளுமன்றத்தின் கீழ்சபை அறிவித்துள்ளது.

இதனிடையே, காஸாவில் நடந்து வரும் அத்துமீறல் அமைதியாக வேடிக்கை பார்க்க முடியாது என நாடாளுமன்றத்தின் முதல் துணை சபாநாயகர் அப்துல்நபி சல்மான் தெரிவித்துள்ளார்.

பஹ்ரைனும் இஸ்ரேலும் 2020 முதல் அமெரிக்க ஆதரவுடன் ஆபிரகாம் உடன்படிக்கையின் ஒரு பகுதியாக தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொண்டது.

அந்த உடன்படிக்கையின் கீழ், இஸ்ரேல் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மொராக்கோவுடனும் உறவுகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...