21 7
உலகம்செய்திகள்

இஸ்ரேல் எல்லையில் மேற்கொள்ளப்பட்ட பகீர் சம்பவம் : உக்கிரமடையும் காசா போர்

Share

இஸ்ரேல் எல்லையில் மேற்கொள்ளப்பட்ட பகீர் சம்பவம் : உக்கிரமடையும் காசா போர்

மூன்று இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் மேற்குக் கரைக்கும் ஜோர்டானுக்கும் இடையிலான எல்லைக் கடவையில் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜோர்டான் சாரதி இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் மீது திடீரென்று துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சம்பவமானது சுமார் 11 மாதங்களாக நீடிக்கும் காசா போரினை மேலும் தூண்டுவதாக அமைந்துள்ளது.

இந்நிலையில் வடக்கு காசாவில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஒரு மூத்த உதவி அதிகாரி மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு கரையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவமானது ஜோர்டான் ஆற்றின் குறுக்கே உள்ள ஆலன்பி பாலத்தில் நடந்துள்ளது.

இஸ்ரேல் தரப்பில் நடந்த சம்பவம் குறித்து தெரிவிக்கையில், ஜோர்டானில் இருந்து லொறியில் வந்த தீவிரவாதி ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரால் தொடர்புடைய தீவிரவாதி கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதனிடையே, ஜோர்டான் தரப்பில் துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும், எல்லைக் கடக்கும் பாதை மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட சாரதி தெற்கு ஜோர்டானில் உள்ள செல்வாக்குமிக்க ஹுவைதாட் பூர்வகுடி சமூகத்தை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...