அவுஸ்திரேலியாவின் முதல் இந்திய வம்சாவளி செனட்டர்., பகவத் கீதையின் மீது சத்தியப்பிரமாணம்
அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் புதிய செனட்டராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரிஸ்டர் வருண் கோஷ் (Varun Ghosh) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பகவத் கீதையின் மீது சத்தியப்பிரமாணம் செய்து பதவுலியேற்ற முதல் செனட்டரும் இவரே.
இந்நிலையில், அவுஸ்திரேலிய செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி நபர் என்ற சாதனையை வருண் கோஷ் படைத்துள்ளார்.
வருண் கோஷ் 1985-இல் இந்தியாவில் பிறந்தார். 1997-இல் பெற்றோருடன் அவுஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்து, பெர்த் கிறிஸ்ட் சர்ச் இலக்கணப் பள்ளியில் பயின்றார்.
பின்னர் பெர்த் பல்கலைக்கழகத்தில் கலை மற்றும் சட்டத்தில் பட்டம் பெற்றார். தனது 17வது வயதில் தொழிலாளர் கட்சியில் சேர்ந்தார்.
பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் காமன்வெல்த் சட்ட அறிஞர் ஆனார். அதே சமயம் கட்சியிலும் தீவிரமாக இருந்தார்.
அவர் முன்பு நியூயார்க்கில் நிதி வழக்கறிஞராகவும், வாஷிங்டனில் உலக வங்கியின் ஆலோசகராகவும் பணியாற்றினார்.
உடல்நலக் காரணங்களால் ஓய்வு பெறும் செனட்டர் பேட்ரிக் டாட்சனுக்குப் பதிலாக வருண் கோஷ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
செனட்டராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அனைவருக்கும் தரமான கல்வி மற்றும் பயிற்சி கிடைப்பதை உறுதி செய்வேன் என்று வருண் கூறினார்.
இதற்கு முன் உலகின் பல தலைவர்களும் பகவத் கீதையின் மீது கைவைத்து நாடாளுமன்றத்தில் பதவிப்பிரமாணம் எடுத்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஜனவரியில், அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் முதல் இந்திய-அமெரிக்க லெப்டினன்ட் கவர்னர் அருணா மில்லர் (Aruna Miller) பகவத் கீதை மீது கை வைத்து பதவிப் பிரமாணம் எடுத்தார்.
பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக் (Rishi Sunak) பகவத் கீதையில் கையை வைத்து பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் அதாவது ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் எம்பியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
Comments are closed.