tamilni 249 scaled
உலகம்செய்திகள்

புகலிடக்கோரிக்கையாளர்களை நாடுகடத்தும் சட்டமூலம் சுனக்கிற்கு கிடைத்துள்ள வெற்றி

Share

புகலிடக்கோரிக்கையாளர்களை நாடுகடத்தும் சட்டமூலம் சுனக்கிற்கு கிடைத்துள்ள வெற்றி

புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு நாடுகடத்த வகை செய்யும் சட்டமூலம் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்றுள்ளது.

பிரித்தானியாவுக்குள் நுழைந்து புகலிடம் கோருவோரின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்வரை, அவர்கள் ஏதாவது ஒரு ஆப்பிரிக்க நாட்டுக்கு அனுப்பி அங்கு தங்கவைப்பதுதான் ருவாண்டா திட்டமாகும்.

புகலிடக்கோரிக்கையாளர்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அவர்கள் ருவண்டாவிலேயே வாழ அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.

சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர் வெளிநாட்டவர்கள் அச்சமடைய வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம் என பிரித்தானியா கூறியுள்ளது.

புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு நாடுகடத்துவது தொடர்பாக சட்டம் ஒன்றைக் கொண்டுவர ரிஷி சுனக் தலைமையிலான பிரித்தானிய அரசு கடுமையாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், ருவாண்டா திட்டம் தொடர்பான சட்டமூலம் ஒன்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கீழவை முன் நேற்று முன்தினம்(12) முன்வைக்கப்பட்டது.

குறித்த சட்டமூலத்தை பிரித்தானியாவின் எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி, ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் எதிர்த்து கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

எனினும், வாக்கெடுப்பில், சட்டமூலத்திற்கு ஆதரவாக 313 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்ததன் மூலம் சட்டமூலம் வெற்றி பெற்றுள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.

இது பிரதமர் ரிஷிக்கு வெற்றியாக கருதப்பட்டாலும், பிரித்தானியாவைப் பொருத்தவரை, ஒரு சட்டமூலம் சட்டமாக்கப்பட வேண்டுமானால், அது ஏழு கட்டங்களில் வெற்றிபெற வேண்டும். இந்நிலையில் முதல் கட்டத்தில் ரிஷி வெற்றிபெற்றுள்ளார் என கூறப்படுகிறது.

குறித்த சட்டமூலத்தில் சில சட்டத்திருத்தங்கள் கொண்டுவராவிட்டால், அடுத்தடுத்த கட்டங்களில் சுனக்கின் திட்டம் தோற்கடிக்கப்படும் என கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
articles2FeEKtDKWyXj0ebdxP7pcx
செய்திகள்உலகம்

வரலாற்று வெற்றி: அமெரிக்காவிடமிருந்து மீட்கப்படும் 3 பழைமைவாய்ந்த சோழர் காலச் சிலைகள்!

தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் இருந்து திருடப்பட்டு அமெரிக்காவிற்குக் கடத்தப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த மூன்று சோழர் காலச்...

image 3a35841713
செய்திகள்இலங்கை

இலங்கையின் சுகாதாரத் துறையில் புதிய திருப்பம்: அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒரே குழுவாக ஒன்றிணைந்து செயற்பட இணக்கம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபைக்கும் அனைத்து சுகாதார தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று...

rajith
செய்திகள்இலங்கை

ராஜித சேனாரத்ன மீதான ஊழல் வழக்கு: விசாரணையின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

மீன்பிடித் துறைமுக மணல் அகழ்வுத் திட்டத்தில் அரசாங்கத்திற்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் வழக்குத்...

images 1 8
செய்திகள்இலங்கை

சதொச வெள்ளைப்பூண்டு மோசடி: முன்னாள் விநியோக முகாமையாளர் உட்பட 3 பேர் கைது – பிணையில் விடுதலை!

2021 ஆம் ஆண்டு லங்கா சதொச நிறுவனத்தின் வெள்ளைப்பூண்டு கையிருப்பினை விற்பனை செய்ததில் அரசாங்கத்திற்கு 17...