2 3 scaled
உலகம்செய்திகள்

ரஷ்யா திரும்பிய உக்ரேனிய முன்னாள் அமைச்சர் படுகொலை! புடின் உதவியாளர்களுக்கு இதே கதி தான் ஏற்படும் – இராணுவ செய்தித்தொடர்பாளர்

Share

ரஷ்யா திரும்பிய உக்ரேனிய முன்னாள் அமைச்சர் படுகொலை! புடின் உதவியாளர்களுக்கு இதே கதி தான் ஏற்படும் – இராணுவ செய்தித்தொடர்பாளர்

கிரெம்ளின் சார்பு உக்ரேனிய அரசியல்வாதியான இல்லியா கிவா (Illia Kyva) ரஷ்யாவில் படுகொலை செய்யப்பட்டார்.

மாஸ்கோ புறநகர் பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் உக்ரேனிய முன்னாள் அமைச்சரான இல்லியா கிவாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

அவர் அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் துப்பாக்கியால் சுடப்பட்டதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக ரஷ்யாவின் விசாரணைக்குழு தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இல்லியா கிவா ரஷ்யாவுக்கு திரும்பிய நிலையில் அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரியில், உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவதற்கு முந்தைய நாள் அன்று, நாடு ”நாசிசத்தால் நனைந்துவிட்டது, ரஷ்யாவால் விடுதலை வேண்டும்” என்றும் தொலைக்காட்சியில் பேசும் போது கிவா கூறியிருந்தார்.

மேலும் அவர் ரஷ்ய குடியுரிமை கோரி விளாடிமிர் புடினுக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனால் உக்ரைனில் உள்ள நீதிமன்றம் அவருக்கு தேசத்துரோக குற்றத்திற்காக 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

இந்த நிலையில் உக்ரைனின் இராணுவ புலனாய்வு செய்தித் தொடர்பாளர் Andriy Yusov கூறுகையில், ‘கிவா முடித்துவிட்டார் என்பதை நாங்கள் உறுதிப்படுத்த முடியும். உக்ரைனின் மற்ற துரோகிகளுக்கும், அதேபோல் புடின் ஆட்சியின் உதவியாளர்களுக்கு இது போன்ற ஒரு முடிவு ஏற்படும். கிவா ஒரு மிகப்பெரிய துரோகி, அயோக்கியர் மற்றும் அவரது மரணம் நியாயமானது’ என கட்டமாக தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...