3 1
உலகம்உலகம்செய்திகள்

இம்ரான்கானுக்கு நீதிமன்றம் பிடியாணை உத்தரவு

Share

இம்ரான்கானுக்கு நீதிமன்றம் பிடியாணை உத்தரவு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு நீதிமன்றம் பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கானின் ஆட்சி கவிழ்ப்புக்கு பின்னர் ஷெபாஸ் ஷெரிப் பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்து வருகிறார். இதனை கண்டித்து தனது ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார் இம்ரான்கான்.

இந்தநிலையில் இம்ரான்கான் மீது ஊழல், பணமோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து வழக்குகள் பதிந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் இதுகுறித்தான வழக்கில் நீதிமன்றில் முன்னிலையாக இம்ரான்கானுக்கு உத்தரவிடப்பட்டது. அப்போது அவரை சுற்றிவளைத்து இராணுவவீரர்கள் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

இதனால் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். அப்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இந்தநிலையில் நேற்று இம்ரான்கான் உள்ளிட்ட அவரது கட்சி தலைவர்களுக்கு பிடியாணை பிறப்பித்து லாகூரில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நீதிமன்றம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் முன்னாள் விமான போக்குவரத்து அமைச்சர் குலாம் சர்வாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...