7 2 scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேலுக்கு ஆயுதம்… சிக்கலை எதிர்கொள்ளும் கனடா

Share

இஸ்ரேலுக்கு ஆயுதம்… சிக்கலை எதிர்கொள்ளும் கனடா

காஸா மீதான தாக்குதல் நீடித்துவரும் நிலையில் இஸ்ரேலுக்கு ஆயுதம் மற்றும் தொழில்நுட்பங்களை கனடா ஏற்றுமதி செய்துள்ளதாக குறிப்பிட்டு கனேடிய சட்டத்தரணிகள் குழு கனடாவின் உலகளாவிய விவகார அமைச்சின் மீது வழக்குத் தொடர்ந்துள்ளது.

அந்த ஆயுதங்கள் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களில் பயன்படுத்தப்படலாம் என்றும் வாதிட்டுள்ளனர்.

ஹமாஸ் படைகள் தாக்குதல் முன்னெடுத்த அக்டோபர் 7ம் திகதிக்கு பின்னர் குறைந்தபட்சம் 21 மில்லியன் அமெரிக்க டொலர் பெருமதியன ஆயுதங்களுக்கு கனடா அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் அந்த நடவடிக்கை சட்டவிரோதமல்ல என வாதிட்டுள்ள கனடா, அந்த ஆயுதங்கள் ஆபத்தானவை அல்ல என்றும் விளக்கமளித்துள்ளது. தற்போது இந்த விவகாரம் தொடர்பில் CLIHR என்ற சட்டத்தரணிகள் அமைப்பு பெடரல் நீதிமன்றத்தை நாடியுள்ளது.

கனடாவின் வெளிவிவகார அமைச்சரே இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதிக்கு அனுமதி அளித்தவர் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளது. அப்படியான ஏற்றுமதி சட்டவிரோதம் என்றும் கனடாவின் உள்நாட்டுச் சட்டங்கள் மற்றும் அதன் சர்வதேச சட்டக் கடமைகளை மீறும் செயல் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

ஹமாஸ் படைகள் முன்னெடுத்த அக்டோபர் 7 தாக்குதலுக்கு பின்னர் போர் பிரகடனம் செய்துள்ள இஸ்ரேல் இதுவரை 30,500 பாலஸ்தீன மக்களை கொன்றுள்ளது. ஏறக்குறைய இரண்டு மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் மற்றும் காசாவில் பஞ்சம் ஏற்படும் என ஐநா எச்சரித்துள்ளது.

Share
தொடர்புடையது
world 150
உலகம்செய்திகள்

சர்வதேச அரசியலில் சலசலப்பு: துருக்கி மற்றும் இஸ்ரேல் குறித்து உகாண்டா ராணுவத் தளபதி அதிரடி கருத்து!

உகாண்டா ராணுவத் தளபதியும், அந்த நாட்டு அதிபர் யோவேரி முசேவேனியின் மகனுமான முஹூசி கைனெருகபா (Muhoozi...

world 149
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு புதையல் வேட்டை விவகாரம்: அரச அதிகாரி உள்ளிட்ட 9 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பு, மண்முனைப் பகுதியில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்திற்கு அருகில், சட்டவிரோதமாகப்...

world 146
உலகம்செய்திகள்

இயேசு கிறிஸ்துவாகத் தன்னைச் சித்தரித்த டொனால்ட் டிரம்ப்: அமெரிக்காவில் வெடித்தது புதிய சர்ச்சை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தன்னை இயேசு கிறிஸ்துவுக்கு நிகராகச் சித்தரிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு...

world 145
செய்திகள்இலங்கைபிராந்தியம்

 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை: பொதுமக்களுக்கு NBRO அவசர அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவும் கடும் மழைப்பொழிவு காரணமாக, நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட (Level-1) மண்சரிவு அபாய...