19 1
உலகம்செய்திகள்

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 16 அறிமுகம்: இடைநிறுத்தப்படும் 6 சாதனங்கள்

Share

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 16 அறிமுகம்: இடைநிறுத்தப்படும் 6 சாதனங்கள்

ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் வருடாந்த செப்டெம்பர் நிகழ்வையொட்டி ஐபோன் 16 (iPhone 16) சாதனத்தை அறிமுகப்படுத்துவதுடன் 6 தற்போதுள்ள 6 சாதனங்களை இடைநிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கமைய, ஐபோன் 15 ப்ரோ, ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 14 பிளஸ், ஐபோன் 13, ஏர்போட்ஸ் 2 மற்றும் ஏர்போட்ஸ் 3 ஆகியவை இடைநிறுத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆப்பிள் தனது வருடாந்த செப்டெம்பர் நிகழ்வை இந்த ஆண்டு செப்டெம்பர் 9ஆம் தேதி குபெர்டினோவில் உள்ள ஆப்பிள் பூங்காவில் நடத்தவுள்ளது.

‘இட்ஸ் க்ளோடைம்’ என அழைக்கப்படும் இந்த நிகழ்வில் டிம் குக் தலைமையிலான நிறுவனத்தின் 4 புதிய ஐபோன்கள் மற்றும் பிற தயாரிப்பு வெளியீடுகள் வெளியிடப்படும்.

இருப்பினும், ஒவ்வொரு ஆண்டும் நடப்பது போல், ஆப்பிள் புதிய ஐபோன் தொடரின் வெளியீட்டில் சில முந்தைய தலைமுறை சாதனங்களை நிறுத்த வாய்ப்புள்ளது.

இதற்கமையவே, ஐபோன் 16 சாதனத்தை அறிமுகத்தை தொடர்ந்து குறித்த 6 சாதனங்களும் இடைநிறுத்தப்படலாம் என்னும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...