24 66161b6eaa27c
இந்தியாஉலகம்செய்திகள்

அம்பானி இல்லத்தில் விழா? ஜாம்நகரில் அடுத்த பிரமாண்ட பார்ட்டி!

Share

அம்பானி இல்லத்தில் விழா? ஜாம்நகரில் அடுத்த பிரமாண்ட பார்ட்டி!

மகன் ஆனந்த் அம்பானியின் திருமண நிச்சயதார்த்தத்திற்கு பிரமாண்ட விழா நடத்தியதை தொடர்ந்து, முகேஷ் அம்பானி ஜாம்நகரில் இன்னொரு பிரமாண்ட பார்ட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

முகேஷ் அம்பானி அண்மையில் தனது மகன் ஆனந்த் அம்பானியின் திருமண நிச்சயதார்த்தத்திற்கு முன்னதாக ஜாம்நகரில் பிரமாண்ட விழா நடத்தினார்.

இதில், கோடீஸ்வரர்கள் முதல் திரைப்பட நட்சத்திரங்கள் வரை, உலகமெங்கும் இருந்து பிரபலங்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

இந்த விழாவின் வீடியோக்கள் இணையத்தில் பரவலாக பார்க்கப்பட்டன. மக்கள் இன்னும் அந்த விழாவின் பிரமாண்டத்தை மறந்து கொள்ளாத நிலையில், இப்போது முகேஷ் அம்பானி தனது மகன் ஆனந்த் அம்பானியின் 29வது பிறந்தநாளை கொண்டாட ஜாம்நகரில் மற்றொரு பிரபலங்கள் நிறைந்த விழாவை நடத்த இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி ஏப்ரல் 10ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடுகிறார், இந்த வருடம் அவருக்கு 29 வயது பூர்த்தி அடைகிறது.// ராதிகா மெர்ச்சண்ட் உடனான நிச்சயதார்த்தத்திற்கு பிறகு வரும் முதல் பிறந்தநாளை குறிக்கும் விதமாக, அம்பானி குடும்பத்தினர் ஜாம்நகரில் ஒரு பிரமாண்ட விழாவை ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த விழாவிற்காக சல்மான் கான், ஓரி, சித்தார்த் பஹரியா மற்றும் மீஸான் ஜாஃப்ரி உள்ளிட்ட பிரபலங்கள் ஏற்கனவே ஜாம்நகருக்கு வந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அம்பானி குடும்பத்தின் ரசிகர் பக்கங்கள் விழா நடக்கும் இடத்தின் சில புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளன. பாடகர் பி பிராக் ஆனந்த் அம்பானியின் பிறந்தநாள் விழாவில் பாட இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

அம்பானி சகோதரர்களில் ஆனந்த் அம்பானி இளையவர். இந்தியாவின் மிகப் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற நிலையில் இருந்தாலும், ஈஷா அம்பானி, ஆகாஷ் அம்பானி மற்றும் ஆனந்த் அம்பானி ஆகியோர் தங்கள் பணிவு மற்றும் பாரம்பரிய மதிப்பிற்காக அறியப்படுகிறார்கள்.

பிரவுன் பல்கலைக்கழகத்தில் படித்த ஆனந்த் அம்பானி தற்போது ரிலையன்ஸ் நிறுவனத்தின் புதிய ஆற்றல் வணிகத்தை கையாள்கிறார்.

அவர் ரிலையன்ஸ் 02C மற்றும் ரிலையன்ஸ் நியூ சோலார் எனர்ஜி ஆகியவற்றின் இயக்குநர் பதவியில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 40 பில்லியன் டாலர்களுக்கு மேல் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
Screenshot 2025 12 22 110737 1170x800 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைக்கவசம் இன்றி அதிவேகப் பயணம்: மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து – வாலிபர் பலி, சிறுவன் உட்பட நால்வர் காயம்!

யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர்...

IMG 2581 1170x658 1
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி எங்கள் சொத்து; விகாரையை அகற்று – யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கண்டனப் போராட்டம்!

யாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் அமையப்பெற்றுள்ள விகாரையை அகற்றக் கோரியும், அங்கு இடம்பெறும் நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும்...

images 2 7
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் ஏற்றுமதித் துறையில் பாரிய வளர்ச்சி: 11 மாதங்களில் 15,776 மில்லியன் டொலர் வருமானம்!

இலங்கையின் ஏற்றுமதித் துறை 2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் (ஜனவரி – நவம்பர்)...

603890102 1355544646614961 2421916803890790440 n
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறை கடற்கரையில் இரு பெரிய கடல் ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுக்கம்!

அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை மற்றும் கல்முனை இடைப்பட்ட கடற்கரைப் பகுதிகளில் இன்று (22) மதியம் இரண்டு...