download 13 1 2
உலகம்செய்திகள்

அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு!

Share

மியன்மார் இராணுவ ஆட்சியாளர்கள் அந்நாட்டின் 2,153 அரசியல் கைதிகளுக்கு இன்று மன்னிப்பு வழங்கியுள்ளனர்.

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இந்த மன்னிப்பு வழங்குவதாக மியன்மார் இராணுவ ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மியன்மாரில் வெசாக் பண்டிகை கசோன் எனும் பெயரில் கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இன்று விடுவிக்கப்பட்ட கைதிகள் பலர்,  சிறைச்சாலைக்கு வெளியே காத்திருந்த தமது அன்புக்குரியவர்களுடன் இணைந்து கொண்டனர்.

2021 பெப்ரவரியில் மியன்மாரில் இராணுவப் புரட்சி நடத்தப்பபட்ட பின்னர் இராணுவ ஆட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களிலும் வேறு செயற்பாடுகளிலும் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

21,000 பேர் கைது செய்யப்பட்டனர் என உள்ளூர் கண்காணிப்பு குழுவொன்று தெரிவித்துள்ளது. 170 ஊடகவியலாளர்களும் கைது செய்யப்பட்டனர் ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.

இந்நிலையில்  தண்டனைச் சட்டக்கோவையின் 505 (ஏ) பிரிவின் கீழ் தண்டனை பெற்ற 2153 பேரே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர். என மியன்மார் இராணுவம் தெரிவித்துள்ளது.

இக்குற்றத்துக்கு 3 வருடங்கள் வரையான சிறைத்தண்டனை விதிக்கப்பட முடியும்.

விடுதலையின் பின்னர் மீண்டும் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் ஏற்கெனவே விதிக்கப்பட்ட தண்டனையின் எஞ்சிய காலத்தையும் அனுபவிக்க வேண்டியிருக்கும் என மியன்மார் இராணுவ ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...