WhatsApp Image 2021 10 29 at 4.05.37 PM
உலகம்செய்திகள்

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு அங்கீகாரம் வழங்கியது அமெரிக்கா

Share

ஆண் அல்லது பெண் என அடையாளப்படுத்த முடியாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கு “X” என்ற பாலின பெயரைப் பயன்படுத்த அனுமதிக்கும் முதல் பாஸ்போர்ட்டை அமெரிக்கா வழங்கியுள்ளது.

இவ் விடயத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, நேபாளம் மற்றும் கனடா உள்ளிட்ட சில நாடுகளுடன் அமெரிக்காவும் தற்போது இணைந்துள்ளது.

இந் நாடுகள், தமது நாட்டு குடியுரிமை கொண்ட மக்கள், அவர்களது கடவுச்சீட்டில் ஆண் அல்லது பெண் ஆகிய பாலினத்தை தவிர மூன்றாவதாக வேறு பாலினத்தை பதிவுசெய்யவும் அனுமதி வழங்குகின்றன.

LGBTQ உரிமைகளுக்கான அமெரிக்க சிறப்பு இராஜதந்திர தூதர் ஜெசிகா ஸ்டெர்ன், இந்த முடிவானது அரசாங்க ஆவணங்களை “வாழும் யதார்த்தத்திற்கு” ஏற்ப கொண்டுவருகிறது என கூறியுள்ளார்.

முந்தைய இரண்டு பாலின வகைகள் பிரதிபலிக்கப்பட்டதை விட, மனித பாலின பண்புகளின் பரந்த அளவிலான கண்ணியம் இந்த மூன்றாவது பாலினத்தை அங்கீகரிப்பதன் மூலம் இருக்கிறது.

ஒரு நபர் தனது உண்மையான அடையாளத்தை பிரதிபலிக்கும் அடையாள ஆவணங்களைப் பெறும்போது, ​​அவர்கள் அதிக கண்ணியத்துடனும் மரியாதையுடனும் வாழ்கிறார்கள்” என ஸ்டெர்ன் மேலும் தெரிவித்துள்ளார்.

#World

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4 1
அரசியல்இலங்கைசெய்திகள்

உங்களது ஆட்சிக்காலத்திலேயே காணிகளை விடுவியுங்கள்: ஜனாதிபதியிடம் நாகதீப விகாராதிபதி நேரில் வலியுறுத்தல்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தனியார் காணிகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர...

25 68ed5a882ec6d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரவதை செய்த பொலிஸ் பரிசோதகருக்கு 7 ஆண்டுகள் சிறை: மொனராகலை மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாகச் சித்திரவதை செய்த குற்றத்திற்காகப் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு...

645574 4228922 updates
உலகம்செய்திகள்

அண்டார்டிகா பனிக்கடியில் ஒளிந்திருக்கும் மர்ம உலகம்: அதிநவீன செயற்கைக்கோள் மூலம் புதிய வரைபடம் வெளியீடு!

அண்டார்டிகாவை மூடியுள்ள பல்லாயிரக்கணக்கான அடி ஆழமான பனிப்படலத்திற்குக் கீழே மறைந்திருக்கும் நிலப்பரப்பு குறித்து சர்வதேச விஞ்ஞானிகள்...

articles2FFE3TpF1W8KlSV5Uh5Ngm
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் தண்டவாளத்தில் ரயில்கள்: திருகோணமலை, மட்டக்களப்பு இரவு நேர சேவைகள் ஜனவரி 20 முதல் ஆரம்பம்!

திட்வா (Titwa) புயல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு...