2 28
உலகம்செய்திகள்

நீண்டகால எதிரிகளை ஒன்றினைய வலியுறுத்தும் அமெரிக்கா

Share

இஸ்லாமியவாத தலைமையிலான அரசாங்கத்தின் மீதான அனைத்துத் தடைகளையும் நீக்குவதாக அமெரிக்கா திடீரென அறிவித்ததைத் தொடர்ந்து, அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சிரியா – இஸ்ரேல் உறவுகள் குறித்து வலியுறுத்தியுள்ளார்.

சவூதி அரேபியாவில் நேற்று சிரியா ஜனாதிபதியை சந்தித்து, அந்நாட்டின்(சிரியாவின்) நீண்டகால எதிரியாக கருதப்படும் இஸ்ரேலுடனான உறவுகளை இயல்பாக்குமாறு கோரியுள்ளார்.

ஒரு தசாப்தத்திற்கும் மேலான இடம்பெற்ற உள்நாட்டுப் போருக்குப் பிறகு மீண்டும் சிரியாவை கட்டியெழுப்ப முயற்சிக்கும் திட்டத்திற்காக அமெரிக்கா விதித்த தடைகளை நீக்குவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

எனினும் மத்திய கிழக்கு வருகையில் இஸ்ரோலை உள்ளடக்காத ட்ரம்பின் பயணம், அமெரிக்காவின் முன்னுரிமைகளில் இஸ்ரேல் எந்த இடத்தில் உள்ளது என்பது குறித்த சந்தேகங்களை இஸ்ரேலில் தூண்டியுள்ளது.

சிரியாவை இஸ்ரேல் மிகப்பெரிய எதிரிகளில் ஒரு நாடாக கருதுகிறது.

மேலும் இஸ்ரேலிய அதிகாரிகள் சிரியாவின் தலைவரான ஷாராவை ஒரு ஜிஹாதிஸ்ட் என்று தொடர்ந்து வர்ணித்து வருகின்றனர்,

இந்நிலையில் சிரியா மீதான தடைகளை நீக்குவதை இஸ்ரேல் எதிர்க்கிறது. மேலும், முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத்தை கவிழ்த்து ஷரா ஆட்சிக்கு வந்ததிலிருந்து இஸ்ரேல் சிரியாமீது இராணுவத் தாக்குதல்களை அதிகரித்துள்ளது.

Share
தொடர்புடையது
10 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் நியாயமானவை: அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் பிரையன் மாஸ்ட் உறுதி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில், மத்திய கிழக்கில் ஈரான் ஆதரவு குழுக்களை இலக்கு வைத்து அமெரிக்கா...

09 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மதுபோதையில் இருப்பவர்களால் பெண்களுக்கு அச்சுறுத்தல்: 71% பெண்கள் பொது இடங்களில் பாதுகாப்பற்ற உணர்வு!

மது அருந்தியவர்களினால் பொது இடங்களில் தமக்கு பாதுகாப்பு இல்லை என இலங்கையில் 71 வீதமான பெண்கள்...

08 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எப்போது? பரீட்சை ஆணையாளர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம்...

07 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

50,000 ரூபாய் லஞ்ச விவகாரம்: தெஹியத்தகண்டிய கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட இருவர் பிணையில் விடுதலை!

பணியில் மீண்டும் இணைந்த ஒருவரின் நியமனக் காலத்தை நீடிப்பதற்காக 50,000 ரூபாயை லஞ்சமாகப் பெற்ற வழக்கில்,...