19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

Share

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானின் 3 முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 13ஆம் திகதி ஈரானை குறிவைத்து இஸ்ரேல் சரமாரியான வான்வழி தாக்குதலை நடத்தியது. பதிலுக்கு ஈரானும், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் நிலை தீவிரமடையவே தற்போது இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.

இதன்படி, அமெரிக்கா ஈரானின் முக்கிய 3 அணுசக்தி நிலையங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், மேலும் பல இலக்குகளை தாம் குறிவைத்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் வெற்றி அடைந்துள்ளது. உலகிலேயே பயங்கரவாதத்தை ஆதரிக்கும் முதல் நாடு ஈரான்தான். அந்நாட்டில் மேலும் சில இடங்களை நாங்கள் குறிவைத்துள்ளோம்.

போரை முடிவுக்கு கொண்டுவர ஈரான் முன்வரவேண்டும். அமெரிக்க இராணுவத்தினர் ஈரானின் அணு ஆயுத நிலைகள் மீது துல்லியமான தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் இணைந்து திட்டமிட்டு இந்த தாக்குதலை நடத்தியுள்ளோம்.

ஈரானில் இன்னும் பல இடங்களை குறிவைத்துள்ளோம். இன்று நாங்கள் செய்ததை உலகின் எந்த இராணுவத்தாலும் செய்ய முடியாது.

ஈரானுக்கு இரண்டு வாய்ப்புகளே உள்ளன. ஒன்று அமைதி ஏற்படும் இல்லாவிட்டால் அழிவு ஏற்படும். இஸ்ரேலுக்கு மரணம், அமெரிக்காவிற்கு மரணம் என்று கடந்த 40 ஆண்டுகளாக ஈரான் கூறி வருகிறது. ஈரானின் அச்சுறுத்தலை தடுக்க நான் நீண்ட காலத்திற்கு முன்பே முடிவு செய்தேன் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
articles2F7n4ENzjaUwYHj2nMIZLh
செய்திகள்இலங்கை

நுகர்வோர் சட்டம் மீறல்: 8 வர்த்தகர்களுக்கு ரூ. 743,000 அபராதம் – குடிநீர்ப் போத்தலுக்கு அதிக விலை வைத்த வர்த்தகருக்கு 5 இலட்சம் அபராதம்!

நுகர்வோர் சேவைகள் கட்டளைச் சட்டத்தை மீறிப் பொருட்களை விற்பனை செய்த 8 வர்த்தகர்களுக்கு ரூபாய் 743,000...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

மெக்சிகோ சிறப்பங்காடி தீ விபத்து: 23 பேர் பரிதாப பலி; 11 பேர் காயம்!

மெக்சிகோவின் சோனோரா (Sonora) மாகாணத்தில் இயங்கி வந்த சிறப்பங்காடி (Supermarket) ஒன்றில் திடீரென ஏற்பட்ட பாரிய...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

நாடளாவிய போதைப்பொருள் சுற்றிவளைப்பு: 3 நாட்களில் 1,314 சந்தேக நபர்கள் கைது – ஐஸ், ஹெரோயின் மீட்பு!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம், கடந்த மூன்று நாட்களில் 1,314...

MediaFile 4
செய்திகள்இலங்கை

யட்டியந்தோட்டை இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடிப்பு: ஒருவர் பலி, 3 பேர் காயம்!

யட்டியந்தோட்டைப் பகுதியில் உள்ள கிருபொருவ தோட்டத்தில் இயங்கி வந்த இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் கொதிகலன் (Boiler)...