உலகம்செய்திகள்

கனடாவில் கொல்லப்பட்ட சீக்கியர் தாக்குதலுக்கு திட்டமிட்டார்: வெளியான புதிய தகவல்

Share
Share

கனடாவில் கொல்லப்பட்ட சீக்கியர் தாக்குதலுக்கு திட்டமிட்டார்: வெளியான புதிய தகவல்

கனடாவில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சீக்கியர் தலைவர், இந்தியாவின் ஹரியானா மாகாணத்தில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜர். இந்திய தரப்பில் அவர் காலிஸ்தான் பிரிவினைவாதி மற்றும் தீவிரவாதி என குற்றஞ்சாட்டப்படுபவர்.

1980களில் இருந்தே இவர் குற்ரச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக கூறுகின்றனர். 1996ல் போலி கடவுச்சிட்டு மூலமாக கனடாவுக்கு தப்பியுள்ளதாகவும் இந்திய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

கனடாவில் லொறி சாரதியாகவும் சீக்கியர்கள் தலைவராகவும் வலம் வந்துள்ளார். அத்துடன் பாகிஸ்தான் சென்று ஆயுதப்பயிற்சியும் வெடிகுண்டு பயிற்சியும் முன்னெடுத்துள்ளார்.

மட்டுமின்றி, கனடாவில் இருந்துகொண்டே, இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் பல்வேறு கொலை சம்பவங்களை நடத்தியுள்ளார் எனவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

கனடாவில் போதை மருந்து மற்றும் ஆயுதம் கடத்தும் குழுக்களுடன் இணைந்து நிதி திரட்டி தீவிரவாத செயல்களை முன்னெடுத்துள்ளார். முன்னாள் பஞ்சாப் முதலமைச்சரை படுகொலை செய்த Jagtar Singh Tara என்பவருடன் இணைந்து நிஜ்ஜர் பயங்கரவாத தாக்குதல் ஒன்றை திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது.

2014ல் ஹரியானா மாகாணத்தில் அமைந்துள்ள Dera Sacha Sauda தலைமையகத்தை தகர்க்க நிஜ்ஜர் திட்டம் வகுத்ததாகவும், ஆனால் இந்தியாவில் அவரால் வர முடியாமல் போகவே, அந்த திட்டம் கைவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

 

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...