24 6633db4ab12c0
உலகம்செய்திகள்

ஐபோன்கள் தொடர்பில் ஆப்பிள் நிறுவனத்திற்கு குவியும் புகார்கள்

Share

ஐபோன்கள் தொடர்பில் ஆப்பிள் நிறுவனத்திற்கு குவியும் புகார்கள்

தற்போது ஐபோன்களில் அலாரம் (Alarm) வேலை செய்யவில்லை என்று உலகத்தின் பல மூலையில் இருந்து ஆப்பிள் நிறுவனத்திற்கு புகார்கள் குவிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அளவுக்கு அலாரம் தொடர்பான புகார்கள் குவிவது இதுதான் முதல் முறை என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதாவது, கடிகார செயலி வேலை செய்யவில்லை என்பதால், அலாரம் அடிக்க வேண்டிய நேரத்தில் ஒலி எழுப்பவில்லை என்று பயனாளிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணத்தினால் ஐபோன்கள் பயன்படுத்தும் பல பயனர்கள் தாமதமாக எழுந்து அலுவலகம் செல்வதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

இதற்கு உடனடியாக தீர்வு காணப்படும் என்றும் ஐ ஓஎஸ் அப்டேட் செய்ததும் அலாரம் சரியாகிவிடும் என்றும் வாடிக்கையாளர்கள் கவலை கொள்ள தேவையில்லை எனவும் ஆப்பிள் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

இதேவேளை அலாரம் ஏன் இயங்கவில்லை என்பதற்கான காரணத்தை ஆப்பிள் நிறுவனம் இதுவரை தெரிவிக்காமல் இருப்பது பயனாளிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...