31
உலகம்செய்திகள்

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் அடுத்த அதிரடி!

Share

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் அடுத்த அதிரடி!

ஆப்கானிஸ்தானில் பெண்கள் வசிக்கும் பகுதிகளிலுள்ள வீடுகளில் ஜன்னல் வைக்கத் தலிபான் அரசாங்கம் தடை உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2021ஆம் ஆண்டு தலிபான் ஆட்சியைப் பொறுப்பேற்றதன் பின்னர் அந்நாட்டு பெண்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில், பெண்கள் ஆரம்பக் கல்வி கற்கவும், பூங்கா உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டதுடன், சமீபத்தில் பெண்கள் பொது இடங்களில் பாடுவதற்கும், கவிதைகள் வாசிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக தற்போது ஆப்கானிஸ்தானில் பெண்கள் வசிக்கும் பகுதிகளிலுள்ள வீடுகளில் ஜன்னல் வைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வீடுகளில் ஜன்னல்கள் இருந்தால் அதனை மறைக்கும் விதத்தில் தடுப்புகள் அமைக்க வேண்டும் என்றும், புதிய கட்டிடங்களில் ஜன்னல்கள் இருக்கக் கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
08 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சுன்னாகத்தில் பெண்ணின் தங்கச் சங்கிலி பறிப்பு: மைலிட்டி முகாம் இராணுவச் சிப்பாய் அதிரடிக் கைது!

யாழ்ப்பாணம், சுன்னாகம் நகரப் பகுதியில் நேற்று (25) காலை பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற...

07 1
செய்திகள்உலகம்

மொஸ்கோவில் அதிர வைத்த தற்கொலைத் தாக்குதல்: காவல்துறை அதிகாரி பலி; உக்ரைன் போர் ஆண்டு நிறைவில் பதற்றம்!

ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் உள்ள சவ்யோலேவ்ஸ்கி (Savyolovsky) தொடருந்து நிலையம் அருகே, நள்ளிரவு வேளையில் நடத்தப்பட்ட...

06 2
செய்திகள்அரசியல்இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், இரத்தினங்களை ஒரு வாரத்திற்குள் ஒப்படைக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் போது தெமட்டகொட மஹவில கார்டன்ஸ் வீட்டில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய...