அடைக்கலம் தேடும் ஆப்கான் சிறுவர்கள்!
ஆப்கானிலிருந்து பெற்றோர் இல்லாமல் பல சிறுவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு விமானம் மூலம் வந்து சேர்ந்துள்ளனர் என ஆஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சர் கரென் அன்ரூஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
ஆப்கானிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் ஹொட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பத்து வயதுக்கும் குறைவான சிறுவர்கள் தனியாக ஆஸ்திரேலியா வந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை படையினரிடம் ஒப்படைப்பதை நாங்கள் பார்த்துள்ளோம், தற்போது ஆஸ்திரேலியாவுக்கு தனியாக வந்த சிறுவர்கள் உள்ளனர். அவர்களை நாங்கள் நன்கு கவனித்துக்கொள்கின்றோம். மேலும் பல சிறுவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வரக்கூடும் என்றார்.
Leave a comment