download 13 1 6
இலங்கைஉலகம்செய்திகள்

கனடா இலங்கை இடையில் கல்வி, திறன் விருத்தி விவசாயத் துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்க நடவடிக்கை.!

Share
கனேடிய உயர் ஸ்தானிகர் எரிக் வோல்ஷ், பிரதமர் தினேஷ் குணவர்தனவை நேற்று (17) கொழும்பு அலரி மாளிகையில் சந்தித்தார்இரு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு உறவுகள் மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இலங்கையில் திறமையான தொழில்நுட்ப வல்லுனர்களை உருவாக்குவதற்காக அம்பாறையில் ஹார்டி உயர் தொழிநுட்ப நிறுவனத்தை நிறுவுவதற்கும் பயணிகள் போக்குவரத்து இரயில்களை அபிவிருத்தி செய்வதற்கும் கடந்த காலத்திலிருந்து கனடா இலங்கைக்கு அளித்து வரும் உதவிகளுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். ஹார்டி நிறுவனத்தை பட்டம் வழங்கும் தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக தரமுயர்த்துவதற்கான முன்மொழிவை கனடா அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
தற்போதைய பொருளாதார சவால்களை வெற்றிகொள்வதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் வடக்கு மற்றும் கிழக்கில் சிறுபான்மையினர் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அவர் உயர் ஸ்தானிகருக்கு விளக்கினார். தற்போது கனடாவில் வாழும் இலங்கை வர்த்தகர்களுக்கு இந்நாட்டில் முதலீடு செய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை எதிர்கொள்ளும் முன்னெப்போதுமில்லாத பொருளாதார சவால்களை முறியடித்து பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து உயர் ஸ்தானிகர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அதிகபட்ச ஆதரவு வழங்கப்படும் என அவர் உறுதியளித்தார்.
இந்த நிகழ்வில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக, கனேடிய உயர் ஸ்தானிகராலயத்தின் அரசியல் துறை உத்தியோகத்தர் இந்திராணி ஜயவர்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.
#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FUIXfciu0r8En4NCdFEIo
செய்திகள்உலகம்

தென் கொரிய முன்னாள் முதல் பெண்மணிக்கு சிறைத்தண்டனை: லஞ்சம் மற்றும் விலையுயர்ந்த பரிசுகளைப் பெற்றதாக நீதிமன்றம் தீர்ப்பு!

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலின் (Yoon Suk...

1769590369 images 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாவகச்சேரி இராணுவ முகாமில் துப்பாக்கிச் சூடு: சிப்பாய் தன்னைத்தானே சுட்டு தற்கொலை முயற்சி!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் இராணுவச் சிப்பாய் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதில்...

Kassapa Thera
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை கடற்கரை ஆக்கிரமிப்பு: பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

திருகோணமலை டச்பே (Dutch Bay) கடற்கரைப் பகுதியில் சட்டவிரோத நிர்மாணங்களை மேற்கொண்டு புத்தர் சிலையை வைத்ததாகக்...

ed1ef740 7f31 11f0 ab3e bd52082cd0ae.jpg
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக மார்ச் மாதம் குற்றப்பத்திரிகை: சட்டமா அதிபர் நீதிமன்றில் அதிரடி அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள வழக்கில், வரும்...