6 12
உலகம்செய்திகள்

புலம்பெயர்தல் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுப்பேன்: பிரான்ஸ் புதிய பிரதமர் உறுதி

Share

புலம்பெயர்தல் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுப்பேன்: பிரான்ஸ் புதிய பிரதமர் உறுதி

பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர், புலம்பெயர்தல் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்க இருப்பதாக உறுதியளித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக, மிஷல் பார்னியேர் (Michel Barnier) என்பவரை ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தேர்ந்தெடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் கைப்பாவையாக இல்லாமல் சுயமுடிவுகள் எடுப்பேன் என்றும், அதே நேரத்தில், ஜனாதிபதியின் சில முக்கிய கொள்கைகளைப் பின்பற்றுவேன் என்றும் கூறியுள்ளார் பார்னியேர்.

பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபின் முதல் பேட்டியளித்த பார்னியேர், முதலாவதாக தெரிவித்துள்ள விடயமே புலம்பெயர்தல் குறித்ததுதான்.

புலம்பெயர்தல் தொடர்பில் கடுமையான கொள்கைகளைப் பின்பற்ற இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் எல்லைகள் சல்லடை போல உள்ளன என்று கூறியுள்ள பார்னியேர், அவற்றின் வழியாக நாட்டுக்குள் புலம்பெயர்தல் கட்டுப்பாடில்லாமல் இருப்பதுபோல உள்ளதாகவும் தான் உணர்வதாக தெரிவித்தார்.

தனக்கு National Rally கட்சியுடன் ஒத்த கொள்கைகள் அதிகம் இல்லை என்றாலும், அவற்றை தான் மதிப்பதாகவும் தெரிவித்துள்ளார் பார்னியேர்.

National Rally கட்சி, புலம்பெயர்தல் எதிர்ப்பு கொள்கைகள் கொண்ட வலதுசாரிக் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 3 5
செய்திகள்உலகம்

இந்தோனேஷியாவில் கோர மண்சரிவு: 7 பேர் பலி! 82 பேரைக் காணவில்லை – மீட்புப் பணிகள் தீவிரம்!

இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளதோடு, மேலும்...

25284407 tn46
உலகம்செய்திகள்

அமெரிக்காவை உறைய வைக்கும் பெர்ன் பனிப்புயல்: 10,000 விமானங்கள் இரத்து – 18 மாநிலங்களில் அவசரநிலை!

அமெரிக்காவின் பெரும் பகுதியைத் தாக்கி வரும் ‘பெர்ன்’ (Winter Storm Fern) எனப்படும் மிக சக்திவாய்ந்த...

articles2FWeZuOSJYmiw4RXxNRts3
செய்திகள்இலங்கை

2026 அரச வெசாக் நிகழ்வு மே 30-இல்: மகாநாயக்க தேரர்களின் இணக்கத்துடன் தீர்மானம்!

2026-ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ அரச வெசாக் (State Vesak Festival) நிகழ்வை மே மாதம் 30-ஆம்...

MediaFile 2 5
செய்திகள்இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி! கட்டுநாயக்கவில் வைத்து சிஐடியினரால் கைது!

சர்வதேச பொலிஸாரினால் (Interpol) சிவப்பு எச்சரிக்கை (Red Notice) விடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்தியாவிற்குத் தப்பிச் சென்று...