தனி ஒருத்தியின் சாதனை!

Preet Chandi

தனி ஒருவராக தென் துருவத்தினை சென்றடைந்த முதல் பெண் என்ற பெருமையை இங்கிலாந்தில் பிறந்த இந்திய வம்சாவளிப் பெண்ணான ப்ரீத் சண்டி பெற்றுள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆரம்பமான அவரது பயணம் அண்டார்டிகா முழுவதும் பனிச்சறுக்கு செய்தபடியே 40 நாட்களில் 1,126 கி.மீ கடந்து சாதனை பெற்றுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்;

அண்டார்டிகா பூமியின் மிகவும் குளிர்ந்த கண்டம். யாரும் அங்கு நிரந்தரமாக வாழ முடியாது. அண்டார்டிகா பயணத்திற்கு திட்டமிட்டபோது அங்குள்ள நிலைமை எனக்கு அவ்வளவாக தெரியாது. பிறகு இரண்டரை வருடங்கள் பிரெஞ்ச் ஆல்ப் மலையிலும், ஐஸ்லாந்தில் உள்ள மலைகளிலும் பயிற்சி எடுத்தேன்

இந்த பயணத்தை முடித்தபோது பெரும் நம்பிக்கை எனக்குள் தோன்றியிருக்கிறது.

ஒருவர் தன் மீது முழு நம்பிக்கை வைத்து எல்லைகளை கடந்து முயற்சி செய்தால் பெரிதாக சாதிக்கலாம் என்ற உத்வேகத்தை அளிக்க விரும்புகிறேன் என்ற அவர் கூறியுள்ளார்.

#WorldNews

Exit mobile version