24 6627286ac9383
உலகம்செய்திகள்

இரவில் தனியாக செல்ல பாதுகாப்பான நகரம்! கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்

Share

இரவில் தனியாக செல்ல பாதுகாப்பான நகரம்! கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரம், இரவில் தனியாக செல்ல பாதுகாப்பான நகரம் என கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.

சமூக மேம்பாட்டுத்துறையின் சார்பில் அபுதாபி நகரில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை தரம் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில் நகரில் வசிக்கும் 160க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 92,576 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. 14 முக்கிய தலைப்புகளில் கருத்துகள் கேட்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது.

அதில் வீட்டு வசதி, வேலை வாய்ப்புகள், தனிநபர் மற்றும் குடும்ப வருமானம், சொத்துகள், வேலை குறித்த தகவல்கள், சுகாதாரம், கல்வி, தனித்திறன்கள் மற்றும் சமூக பாதுகாப்பு உள்ளிட்ட பலவற்றின் கீழ் கேள்விகள் கேட்கப்பட்டது.

அதன் முடிவில் 73 சதவீதம் பேர் தங்கள் குடும்பத்துடன் செலவழித்த நேரத்தால் மகிழ்ச்சியுடன் இருந்ததாக தெரிவித்தனர்.

34.3 சதவீதம் பேர் வருமானத்தில் திருப்தி அடைந்துள்ளதாகவும், அதேபோல் தனிநபர் வருமானத்தில் 64.7 சதவீதம் பேர் திருப்தி அடைந்துள்ளதாகவும், 70.6 சதவீதம் பேர் தாங்கள் வசிக்கும் வீடுகள் வசதியாகவும், திருப்திகரமாகவும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், பெரும்பாலான மக்கள் இரவில் தனியாக நடக்கும்போது தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், எந்த பிரச்சனையும் இல்லை என்றும் இந்தக் கருத்துக்கணிப்பு உறுதி செய்தது. இதில் 93.6 சதவீதம் பேர் தங்கள் கருத்துகளை கூறினர்.

Share
தொடர்புடையது
11 8
இலங்கைசெய்திகள்

செம்மணியில் இன்று கண்டெடுக்கப்பட்ட முக்கிய அடையாளம்! தோண்ட தோண்ட காத்திருக்கும் அதிர்ச்சி

இதுவரை காலமும் செம்மணி மனித புதைகுழியில் இருந்து வேறு பொருட்கள் எவையும் மீட்கப்படாத நிலையில் இன்றைய...

10 8
இலங்கைசெய்திகள்

ரில்வின் சில்வாவிற்கு தேசியப் பட்டியல் ஆசனம்!

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவிற்கு தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்புரிமை...

8 8
இலங்கைசெய்திகள்

தமிழர் பகுதியில் பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய இந்து ஆலயத்தின் செயற்பாடு

தமிழர் பகுதியான மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த...

9 7
இலங்கைசெய்திகள்

விசாரணை வளையத்துக்குள் சிக்கப் போகும் அரசாங்க அதிகாரிகள்! சிலர் தப்பியோட்டம்

பல்வேறு மோசடிகள் மற்றும் ஊழல் முறைகேடுகளில் அரசியல்வாதிகளுக்கு ஆதரவளித்ததாகக் கூறப்படும், சுமார் 18 உயர் அரச...