images 1
உலகம்செய்திகள்

காதலிப்பதற்கு ஒரு வாரம் விடுமுறை – செமகுஷியில் இளசுகள்!

Share

சீனாவில் குழந்தை பிறக்கும் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. அரசு ஆலோசகர்கள் கொடுத்த ஐடியா தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகவும், விவாத பொருளாகவும் மாறி இருக்கிறது.

குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு கல்லூரிகள் தற்போது இந்த பலே ஐடியாவை பின்பற்ற துவங்கியுள்ளன. சீனாவில் செயல்பட்டு வரும் ஒன்பது கல்லூரிகளில் இந்த தேசிய பிரச்சினையை எதிர்கொள்ளும் வகையில், தடாலடியான திட்டத்தை துவங்கிவிட்டன.

ஏப்ரல் மாதத்தில் அதிகபட்சம் ஒரு வாரம் வேண்டுமானாலும் விடுப்பு எடுத்துக் கொண்டு மாணவர்கள் தங்களின் இணையரை கண்டுபிடித்து காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொள்ளலாம்.

இதன் மூலம் சீனாவின் குறைந்து வரும் குழந்தை பிறப்பு எண்ணிக்கையை சமன் செய்ய முடியும். மார்ச் 23 ஆம் தேதி ஃபேன் மெய் கல்வி குழுமம் சார்பில் நடத்தப்படும் பள்ளிகளில் ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 7 ஆம் தேதி வரை மாணவர்களுக்கு விடுப்பு அளித்துள்ளது.

இந்த ஏழு நாட்கள் விடுப்பு காலம் மாணவர்களை, “இயற்கையை நேசிக்கவும், காதல் வாழ்க்கையை கற்றுக் கொண்டு இலையுதிர் காலத்தில் மகிழ்ச்சியுடன் காதலை கொண்டாடவும்,” ஊக்குவிக்கும். “மாணவர்கள் பசுமையான நீர்நிலைகள், மலைப்பிரதேசங்களுக்கு சென்று, இலையுதிர்கால அமைதியை உணர்வார்கள் என நம்புகிறேன்.

இது மாணவர்களின் மனவோட்டத்தை விரிவுப்படுத்துவதோடு, அவர்களின் உணர்வுகளை ஆழமாக்கி, அவர்கள் வகுப்பறையில் அதிக சிறப்பாக பாடங்களை உள்வாங்க உதவியாக இருக்கும்,” என்று மியான்யங் ஃபிளையிங் கல்லூரி தலைவர் லியாங் குயோஹூய் தெரிவித்து இருக்கிறார்.

ஒருவார கால விடுப்பின் போது மாணவர்கள், டயரி எழுதுவது, தனிநபர் வளர்ச்சி பற்றி குறித்துக் கொள்வது, பயண வீடியோக்களை எடுப்பது போன்றவற்றை வீட்டுப் பாடமாக செய்ய வேண்டும்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....