tamilni 255 scaled
உலகம்செய்திகள்

லண்டனில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக மாபெரும் பேரணி

Share

லண்டனில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக மாபெரும் பேரணி

லண்டனில் இஸ்ரேல் – ஹமாஸ் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி சுமார் 100,000 மக்கள் திரண்டு பேரணியில் ஈடுபட்டதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

குறித்த பேரணியானது 21.10.2023 முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பேரணியில் பலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து முழக்கமிட்ட மக்கள், கைகளில் பாலஸ்தீன கொடிகள் மற்றும் பதாகைகளை ஏந்தியவாறு போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

பேரணியிலிருந்த காசா பெண்ணொருவர், “பாலஸ்தீன நாட்டவரான தாம் ஒரு நாள் சொந்த நாட்டுக்கு திரும்ப வேண்டும் என ஆசைப்படுகிறேன். காசாவில் குடும்பத்தினர் உள்ளனர். பாலஸ்தீன விடுதலை தொடர்பில் தீவிர நடவடிக்கை தேவை. தற்போதைய சூழலில் பேரணி ஒன்றே தீர்வாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

இந்த பேரணியானது, மத்திய லண்டனில் தொடங்கி பிரதமர் ரிஷி சுனக்கின் உத்தியோகப்பூர்வ இல்லம் முன்பு முடிவடைந்துள்ளது.

பேரணியில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரின் படங்கள் போர் குற்றவாளிகள் என குறிப்பிடப்பட்டிருந்தது.

தடை செய்யப்பட்ட ஹமாஸ் குழுவினருக்கு ஆதரவு தெரிவிப்பது குற்றச்செயல் என குறிப்பிடப்பட்டிருந்த போதும், இந்த பேரணியானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 100,000 மக்கள் இந்த பேரணியில் கலந்து கொண்ட போதும் அமைதியான முறையிலேயே இப்பேரணி நடைபெற்றுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...