oeSXbxJJTSmETxTKEX3o 1
உலகம்செய்திகள்

தரையிறங்கிய விமானத்தில் திடீரென பற்றியது தீ!

Share

கனடாவின் ரொறன்ரோவின் பியர்சன் விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானமொன்று திடீரென தீப்பற்றிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வெஸ்ட் ஜெட் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானமொன்றின் எஞ்சினிலேயே தீப்பற்றிக் கொண்டது.

எட்மோன்டனிலிருந்து ரொறன்ரோ திரும்பிய விமானமே இவ்வாறு தீப்பற்றிக் கொண்டது. விமானப் பணியாளர்கள் விரைந்து செயற்பட்டு தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதனால் எவருக்கும் கா யங்கள் ஏற்படவில்லை என பியர்சன் விமான நிலைய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானத்தில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக விமானத்திலிருந்து இறக்கிவிடப்படடதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமானம் எதனால் தீப்பற்றிக் கொண்டது என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 14
இலங்கைசெய்திகள்

அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை: மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பதவியை இரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை...

17 13
இலங்கைசெய்திகள்

நான்கு தமிழ் இளைஞர்கள் பரிதாப மரணம்

புத்தளம் (Puttalam) மாவட்டம், வென்னப்புவ கடலில் மூழ்கி நால்வர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். மேற்படி நால்வரும் குளித்துக்...

19 13
இலங்கைசெய்திகள்

இறம்பொட கோர விபத்து : 23ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை

கொத்மலை, ரம்பொட கரண்டியெல்ல பகுதியில் கடந்த 11 ஆம் திகதி நடந்த பேருந்து விபத்தில் படுகாயமடைந்து...

18 13
இலங்கைசெய்திகள்

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றம்

கொழும்பு செட்டியார் தெருவில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 240,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. இன்று...