24 662d5037b0da1
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் நடுவானில் திடீரென உடைந்து விழுந்த விமான கதவு

Share

அமெரிக்காவில் நடுவானில் திடீரென உடைந்து விழுந்த விமான கதவு

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஜான் எப்.கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் (John F. Kennedy International Airport) இருந்து புறப்பட்ட விமானம் ஒன்றில் அவசர கதவுகள் தீடிரென கீழே விழுந்த சம்பவத்தினால் பயணிகள் குழப்பமடைந்துள்ளனர்.

டெல்டா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் 520 என்ற எண் கொண்ட போயிங் 767 ரக குறித்த விமானமானது லாஸ் ஏஞ்சல்ஸ்(Los Angeles) நகர் நோக்கி புறப்பட்டு சென்றுள்ளது.

இதன்போது, அந்த விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த வேளை, அதன் அவசரகால கதவு திடீரென விமானத்தில் இருந்து தனியாக பிரிந்து கீழே விழுந்துள்ளது.

இது தொடர்பில் விமானிக்கு தகவல் சென்ற நிலையில் உடனடியாக அந்த விமானம் மீண்டும் நியூயார்க்குக்கு திரும்பி அனுப்பப்ட்டுள்ளது. இந்த சம்பவம், விமானம் புறப்பட்டு சென்று 33 நிமிடங்கள் கழிந்து நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் விமான பயணி ஒருவர் கூறும்போது, விமானத்திலிருந்து ஒரு பெரிய சத்தம் கேட்டது. இதனால், விமானி அறையில் இருந்து அடுத்து, வெளியான அறிவிப்புகளை கூட சரியாக கேட்க முடியவில்லை. இந்த சம்பவம் எதிரொலியாக, பயணிகள் அனைவரும் உண்மையில் பயந்து போய் விட்டோம் என்று கூறியுள்ளார்.

மேலும், டெல்டா விமான நிறுவன பிரதிநிதி ஒருவர் சம்பவம் குறித்து கூறும்போது, எங்களுடைய நிறுவனம் மீட்பு முயற்சிகளுக்கு முழுமையாக ஆதரவளிக்கும். விசாரணைக்கு முழு அளவில் ஒத்துழைப்பு அளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் விமானத்திலிருந்து அவசரகால கதவு கீழே விழுந்த சம்பவம் பற்றி அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் விசாரணை நடத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...

23 2
இலங்கைசெய்திகள்

விரயமாகும் இறக்குமதி செய்யப்பட்ட உப்பு.. கடும் நெருக்கடியில் அரசாங்கம்!

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு, துறைமுகத்தில் உள்ள சில கொள்கலன்களில் இருந்து உருகி வெளியேறி வருவதாக கொள்கலன்...

22 4
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை! எச்சரிக்கும் அதிகாரிகள்

குடும்ப வன்முறை சம்பவங்கள் குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். இந்த குடும்ப வன்முறை...

20 2
இலங்கைசெய்திகள்

கிளிநொச்சியில் விபத்துக்குள்ளான எரிபொருள் பாரவூர்தி.. ஒருவர் படுகாயம்!

கிளிநொச்சி – பூநகரி பகுதியில் எரிபொருள் பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து...