rtjy 56 scaled
உலகம்செய்திகள்

புதிய ஏழு கிரகங்களை கண்டுபிடித்த நாசா

Share

புதிய ஏழு கிரகங்களை கண்டுபிடித்த நாசா

கெப்லர் விண்வெளி தொலைநோக்கியொன்றின் மூலம் நாசா ஏழு புதிய கிரகங்களை கண்டுபிடித்து குறித்த கண்டுபிடிப்பிற்கு ஆய்வாளர்கள் கெப்லர்-385 என்று பெயர் வைத்துள்ளனர்.

சூரியக் குடும்பத்திலுள்ள கிரகங்களை காட்டிலும் குறித்த கிரகங்களில் இருந்து வெளி வரும் வெப்பம் அதிகமாக காணப்படுகின்றமையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும், கண்டுபிடிக்கப்பட்ட ஏழு கிரகங்களும் அளவில் பூமியை விடப் பெரிதாகவும் நெப்டியூனை விட சிறியதாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெப்லர்-385 இன் மையத்தில் சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரம் இருக்கிறது. அந்த நட்சத்திரம் நமது சூரியனை விட சுமார் 10% பெரியதாகவும் 5% வெப்பமானதாகவும் காணப்படுகிறதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

பொதுவாக வெளியே கண்டுபிடிக்கப்படும் சூரிய குடும்பங்களில் அதிகளவில் கிரகங்கள் இருக்காது என்றும் ஆறுக்கும் மேற்பட்ட கிரகங்களைக் கொண்ட ஒரு சில சூரியக் குடும்பங்களில் இந்த கெப்லர்-385 ஒன்றாக இருக்கிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களில் ஏதேனும் ஒரு கிரகத்தில் உயிரினங்கள் வாழ வாய்ப்புள்ளதா என்பது பற்றிய தகவல் இன்னும் தெரியவில்லை. இந்த கிரகங்களின் அமைப்பை பற்றி இன்னும் கூடுதல் ஆய்வை நாசா மேற்கொள்ள இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலைகள் அதிரடி உயர்வு: இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது...

Untitled 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு: 6-ஆம் நாளில் மேலும் இரண்டு எலும்புக்கூடுகள் மீட்பு!

யாழ்ப்பாணம், செம்மணி சித்துபாத்தி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியின் ஆறாம் நாள்...