4 12 scaled
உலகம்செய்திகள்

குழந்தையுடன் வந்தவரைக் கொல்ல வந்த நபர்: மனதைக் பதபத வைக்கும் காட்சி

Share

குழந்தையுடன் வந்தவரைக் கொல்ல வந்த நபர்: மனதைக் பதபத வைக்கும் காட்சி

குழந்தையுடன் வந்த ஒருவரைக் கொல்ல கொலையாளி ஒருவர் துப்பாக்கியுடன் வர, தன் குழந்தையை அமைதியாக ஒரு பெண்ணிடம் ஒப்படைத்துவிட்டு, சாகத் தயாராகும் ஒருவரைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகி மனதைக் கலங்க வைத்துள்ளது.

பிரேசில் நாட்டில், சட்டத்தரணியாக பணியாற்றிவந்த André Ribeiro (46) என்பவர், தனது மகளுடன் காரில் பயணித்துள்ளார். Permambuco என்னுமிடத்தில் அவர் காரிலிருந்து இறங்கி, காரிலிருக்கும் ஒரு பெண்ணிடமிருந்து தனது மகளை வாங்கிய நிலையில், ஒருவர் துப்பாக்கியுடன் அவரை நெருங்கியுள்ளார்.

அந்த நபர் தன்னைக் கொல்லவந்துள்ளதை உணர்ந்து கொண்ட André, பதறாமல், அமைதியாக, கடைசியாக தனது குழந்தையை ஒரு முறை பார்த்துவிட்டு, குழந்தையை அந்தப் பெண்ணிடம் கொடுத்துவிட்டு தரையில் உட்கார்ந்துகொள்வதை வெளியாகியுள்ள CCTV காட்சியில் காணமுடிகிறது.

குழந்தையுடன் வந்தவரைக் கொல்ல வந்த நபர்: மனதைக் கலங்க வைக்கும் காட்சி | Man Came To Kill A Person With A Child

Andréயை அந்த நபர் ஐந்து முறை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

தான் ஏதாவது செய்ய முயன்றால் அந்த நபர் தன் குழந்தையையும் தாக்கிவிடக்கூடும் என்று எண்ணினாரோ என்னவோ, மிகவும் அமைதியாக குழந்தையைக் கொடுத்துவிட்டு உயிரை விடத் தயாராகியுள்ளார் André.

அவர் எதிர்பார்த்ததுபோலவே அந்த நபர் அந்த பெண்ணையோ குழந்தையையோ ஒன்றும் செய்யவில்லை. அந்த நபர் கூலிக்காக கொலை செய்பவர் என்றும், அவரது குறி André மட்டுமே என்றும் கருதப்படுகிறது.

அந்தப் பெண் யார் என்று தெரியவில்லை. அதேபோல, Andréயைக் கொன்றவர் கைது செய்யப்பட்டாரா என்பது போன்ற விடயங்களும் தெரியவில்லை.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...