சீனாவில் 1300 ஆண்டுகள் பழமையான தண்ணீரில் மிதக்கும் வுஷன் நகரம் சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பச்சை பசேலென காட்சியளிக்கும் பூங்காக்கள் என மனதை மயக்கும் ஹூசைன் நகரில் கட்டிடங்களுக்கு நடுவே பாயும் யாங்சே நதி சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ளது.
இந்நிலையில் அலங்கரிக்கப்பட்ட படகுகளில் சவாரி செய்து குடும்பத்துடன் இளைப்பாறும் மக்கள் வீதிகளில் குவிக்கப்பட்டு இருக்கும் கலை நயமிக்க பொருட்களை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.
இதன்போது கடந்த வாரத்தில் மட்டும் 1,50,000 பேர் வந்து சென்றதால் உள்ளூர் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
#world
Leave a comment