உலகம்செய்திகள்

8 இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை! நிராகரித்த கத்தார் நீதிமன்றம்

Share
1 3 scaled
Share

8 இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை! நிராகரித்த கத்தார் நீதிமன்றம்

8 இந்தியர்களின் மரண தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டை கத்தார் நீதிமன்றம் நிராகரித்தது.

கத்தாரில் 8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து இந்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கத்தார் நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனால், இரு நாடுகளும் இந்த தகவலை இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

கத்தார் நிறுவனமான அல் தஹ்ரா நிறுவனத்தில் பணிபுரியும் இந்த 8 இந்தியர்கள், உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட போதிலும், அவர்கள் மீதான குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் கத்தார் அதிகாரிகளால் வெளியிடப்படவில்லை.

இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததற்காக அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக்க கூறப்படுகிறது. தற்போது மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டதையடுத்து, இந்திய அரசு மற்றொரு சுற்று மேல்முறையீட்டுக்கு செல்லும் என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்திய அரசு தனது குடிமக்களைக் காப்பாற்ற தன்னால் இயன்றவரை முயற்சிப்பதாகக் கூறியுள்ளது.

ஆகஸ்ட் 2022-ல் கைது செய்யப்பட்டவர்களில் கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் பிரேந்திர குமார் வர்மா, கேப்டன் சவுரப் வசிஷ்ட், கமாண்டர் அமித் நாக்பால், கமாண்டர் பூர்ணேந்து திவாரி, கமாண்டர் சுகுணாகர் பகலா, கமாண்டர் சஞ்சீவ் குப்தா மற்றும் மாலுமி ராகேஷ் கோபகுமார் ஆகியோர் அடங்குவர். அவர்கள் தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டன்சி சர்வீசஸ் மூலம் பணியமர்த்தப்பட்டனர், கத்தாரின் ஆயுதப் படைகளுக்கு பயிற்சி மற்றும் சேவைகளை வழங்குகிறார்கள்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...