1 1 1 scaled
உலகம்செய்திகள்

60 நாடுகளை சேர்ந்த 7000 மக்கள்: காசா எல்லையில் சிக்கி தவிக்கும் வெளிநாட்டினர்

Share

60 நாடுகளை சேர்ந்த 7000 மக்கள்: காசா எல்லையில் சிக்கி தவிக்கும் வெளிநாட்டினர்

இஸ்ரேல் ஹமாஸ் படையினருக்கு இடையிலான போரினால் 7000 வெளிநாட்டு குடிமக்கள் வெளியேற முடியாமல் காசா பகுதியில் சிக்கித் தவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் படையினர் இடையிலான போர் நடவடிக்கையானது 4வது வாரமாக நீடித்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை கூண்டோடு ஒழித்து கட்ட வேண்டும் என்ற நோக்கில் இஸ்ரேல் ராணுவத்தினர் தரை, கடல், வான் என மும்முனை தாக்குதலை பாலஸ்தீனத்தின் மீது நடத்தி வருகிறது.

இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டும், படுகாயமடைந்தும் வருகின்றனர்.

இந்நிலையில் பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த 7000 குடிமக்கள் பாலஸ்தீனத்தின் காசாவில் சிக்கித் தவிப்பதாக எகிப்து வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

எகிப்து வெளியுறவு அமைச்சகத்தை சுட்டிக் காட்டி DPA செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலில், 60 நாடுகளை சேர்ந்த சுமார் 7000 பொதுமக்கள் காசாவில் இருந்து வெளியேறும் வாய்ப்பிற்காக காத்து இருப்பதாக தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 360 வெளிநாட்டினர் மற்றும் காயமடைந்த 81 பாலஸ்தீனியர்கள் காசாவில் இருந்து ரஃபா எல்லை வழியாக எகிப்துக்கு வந்துள்ளார்கள் என CNN தெரிவித்துள்ளது.

இவற்றில் அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா, ஜோர்டான், சவுதி அரேபியா, இத்தாலி, ஜப்பான் மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளின் குடிமக்கள் எகிப்துக்கு வந்து இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
25 68f5c4968ea01
செய்திகள்இலங்கை

வெள்ள அபாய எச்சரிக்கை: பல வான்கதவுகள் திறப்பு!

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயா படுகைப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையைக் கருத்தில்...

image 95f229676a
செய்திகள்உலகம்

கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு: அமெரிக்கப் படைகள் நீர்மூழ்கிக் கப்பலைத் தகர்த்தன!

லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து கரீபியன் கடல் வழியாக அமெரிக்காவிற்கு அதிவிரைவு படகுகள் மூலம் போதைப்...

1752485228 GovyPay 6
செய்திகள்இலங்கை

போக்குவரத்து அபராதங்களை GovPay மூலம் செலுத்தலாம்: இலங்கை பொலிஸ் அறிவிப்பு

இலங்கைப் பொலிஸ் இன்று (அக்டோபர் 20) அறிவித்துள்ளதன் படி, தென் மாகாணத்தில் உள்ள வாகன ஓட்டுநர்கள்,...

image 7efc8d34a7
செய்திகள்இலங்கை

வவுனியாவில் பாரிய போதைப்பொருள் கைப்பற்றல்: 3.59 லட்சம் மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

வவுனியாவில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில், மூன்று லட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரைகளுடன்...