உலகம்செய்திகள்

கூகுளுக்கு 400 கோடி அபராதம்! மேல்முறையீட்டை அதிரடியாக ரத்து செய்த ரஷ்யா நீதிமன்றம்

Share
tamilni 35 scaled
Share

கூகுளுக்கு 400 கோடி அபராதம்! மேல்முறையீட்டை அதிரடியாக ரத்து செய்த ரஷ்யா நீதிமன்றம்

50 மில்லியன் அபராதத்திற்கு எதிராக கூகுள் செய்த மேல்முறையீட்டை ரஷ்ய நீதிமன்றம் நிராகரித்தது.

உக்ரைன் போர் பற்றிய போலித் தகவலை நீக்கத் தவறியதாக கூகுள் நிறுவனத்திற்கு ரஷ்ய நீதிமன்றம் 4.6 பில்லியன் ரூபிள் (49.4 மில்லியன் டொலர்) அபராதம் விதித்தது.

பயங்கரவாத உள்ளடக்கத்தை அகற்ற கூகுள் (Google) தவறியதாகவும், LGBT பிரச்சாரம் என்று ரஷ்யா அழைக்கும் பரப்புரைக்காகவும் இந்த அபராதம் விதிக்கப்பட்டதாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் அப்போது தெரிவித்தன.

டிசம்பரில் பிற்பகுதியில் அறிவிக்கப்பட்ட இந்த அபராதம், ரஷ்யாவில் கூகுளின் வருடாந்திர வருவாயில் ஒரு பங்காக கணக்கிடப்பட்டது.

இந்த நிலையில், ஆல்பாபெட்டின் கூகுள் மீண்டும் அபாரதத்திற்கு எதிராக மேல்முறையீடு செய்தது. ஆனால், ரஷ்ய நீதிமன்றம் அந்த மேல்முறையீட்டை நிராகரிப்பதாக தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, 2021யின் பிற்பகுதியில் 7.2 பில்லியன் ரூபிள் மற்றும் 2022யில் 21.2 பில்லியன் ரூபிள் அபராதம் விதிக்கப்பட்டு, அப்போதும் கூகுளின் மேல்முறையீடுகள் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...