tamilni 35 scaled
உலகம்செய்திகள்

கூகுளுக்கு 400 கோடி அபராதம்! மேல்முறையீட்டை அதிரடியாக ரத்து செய்த ரஷ்யா நீதிமன்றம்

Share

கூகுளுக்கு 400 கோடி அபராதம்! மேல்முறையீட்டை அதிரடியாக ரத்து செய்த ரஷ்யா நீதிமன்றம்

50 மில்லியன் அபராதத்திற்கு எதிராக கூகுள் செய்த மேல்முறையீட்டை ரஷ்ய நீதிமன்றம் நிராகரித்தது.

உக்ரைன் போர் பற்றிய போலித் தகவலை நீக்கத் தவறியதாக கூகுள் நிறுவனத்திற்கு ரஷ்ய நீதிமன்றம் 4.6 பில்லியன் ரூபிள் (49.4 மில்லியன் டொலர்) அபராதம் விதித்தது.

பயங்கரவாத உள்ளடக்கத்தை அகற்ற கூகுள் (Google) தவறியதாகவும், LGBT பிரச்சாரம் என்று ரஷ்யா அழைக்கும் பரப்புரைக்காகவும் இந்த அபராதம் விதிக்கப்பட்டதாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் அப்போது தெரிவித்தன.

டிசம்பரில் பிற்பகுதியில் அறிவிக்கப்பட்ட இந்த அபராதம், ரஷ்யாவில் கூகுளின் வருடாந்திர வருவாயில் ஒரு பங்காக கணக்கிடப்பட்டது.

இந்த நிலையில், ஆல்பாபெட்டின் கூகுள் மீண்டும் அபாரதத்திற்கு எதிராக மேல்முறையீடு செய்தது. ஆனால், ரஷ்ய நீதிமன்றம் அந்த மேல்முறையீட்டை நிராகரிப்பதாக தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, 2021யின் பிற்பகுதியில் 7.2 பில்லியன் ரூபிள் மற்றும் 2022யில் 21.2 பில்லியன் ரூபிள் அபராதம் விதிக்கப்பட்டு, அப்போதும் கூகுளின் மேல்முறையீடுகள் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
500x300 23304852 4 fog
செய்திகள்விளையாட்டு

இந்தியா – தென்னாப்பிரிக்கா 4-வது டி20 போட்டி ரத்து: லக்னோவில் கடும் பனியால் பாதிப்பு!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில்...

MediaFile 5 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கொத்மலை – இறம்பொடை மண்சரிவு: பெண்ணொருவருடையது என சந்தேகிக்கப்படும் உடல் பாகம் மீட்பு!

கொத்மலை – இறம்பொடை பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கிக் காணாமல் போனவர்களில் ஒரு பெண்ணுடையது...

23 658fd712815b0
இலங்கைசெய்திகள்

பேருந்து – முச்சக்கர வண்டி மோதிய விபத்தில் தாய் மற்றும் இரண்டு வயது குழந்தை பலி!

தெஹியத்தகண்டிய, முவகம்மன பகுதியில் இன்று (17) பிற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

MediaFile 796x445 1
இலங்கைசெய்திகள்

பாதுகாப்பு அச்சுறுத்தல்: அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு!

வைத்தியசாலை வளாகத்தில் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, தமக்கு உரிய பாதுகாப்பு இல்லை எனக் கூறி...