23 64f479c069bbf
உலகம்செய்திகள்

4 வயது பெண் குழந்தையை துப்பாக்கியால் சுட்ட அமெரிக்க பெண்

Share

4 வயது பெண் குழந்தையை துப்பாக்கியால் சுட்ட அமெரிக்க பெண்

அமெரிக்காவில் துப்பாக்கி பாதுகாப்பு குறித்து விளக்கம் அளித்து கொண்டு இருந்த போது பெண் ஒருவர் 4 வயது குழந்தையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் துப்பாக்கி பாதுகாப்பு குறித்து விளக்கம் அளித்து 25 வயது பெண் ஒருவர் 4 வயது சிறுமியை துப்பாக்கியால் சுட்டதை தொடர்ந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக டென்னசி பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் வெளியிட்ட அறிக்கையில், சம்பந்தப்பட்ட பெண் பிரேனா ரன்னியன்ஸ்(Breanna Runions) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும் பிரேனா ரன்னியன்ஸின் கைது நடவடிக்கையின் போது அதிகாரிகளிடம் துப்பாக்கி பாதுகாப்பு குறித்து விளக்கும் போது தூண்டுதலை இழுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

எவாஞ்சலின் குண்டர் மரணம் தொடர்பாக பிரேனா ரன்னியன்ஸின் மீது கொலை மற்றும் மோசமான குழந்தை துஷ்பிரயோகம் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

4-year-old-girl-after-us-woman-fatally-shoots:4 வயது பெண் குழந்தையை துப்பாக்கியால் சுட்ட அமெரிக்க பெண்: பின்னணி காரணம்

பொலிஸார் விசாரணையின் போது, பிரேனா ரன்னியன்ஸ் உயிருக்கு ஆபத்தான காயத்தை ஏற்படுத்தியது சிறுமியின் உயிர் பறி போவதற்கு முக்கிய காரணம் என தீர்மானித்துள்ளனர்.

துப்பாக்கி பாதுகாப்பு குறித்து விளக்கம் கொடுத்து கொண்டு இந்த சம்பவம் நடைபெற்றதாக பிரேனா ரன்னியன்ஸ் கூறிய கூற்று சம்பவ இடத்தில் இருந்த அவருடைய பெண் தோழியும் மற்றொரு 7 வயது குழந்தையின் விளக்கத்துடன் முரண்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் 6 வயது மகனுடன் துப்பாக்கி குண்டு பாய்ந்து இந்திய தம்பதி மரணம்!
அமெரிக்காவில் 6 வயது மகனுடன் துப்பாக்கி குண்டு பாய்ந்து இந்திய தம்பதி மரணம்!
கொலை விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பிரேனா ரன்னியன்ஸ் கைது செய்யப்பட்டு, $1.5 மில்லியன் பத்திரத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...