18 25
உலகம்செய்திகள்

ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாகியுள்ளதால் பிரித்தானியாவுக்கு நான்கு பாதிப்புகள்

Share

ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாகியுள்ளதால் பிரித்தானியாவுக்கு நான்கு பாதிப்புகள்

ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாகியுள்ள விடயம் உலக நாடுகள் பலவற்றிற்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கனடா, மெக்சிகோ, சீனா, ஜேர்மனி என பல நாடுகள் ட்ரம்பின் வரி விதிப்புகளை எதிர்கொள்ள பதற்றத்துடன் காத்திருக்கின்றன.

இந்நிலையில், வரி விதிப்புகள் மட்டுமின்றி, ட்ரம்ப் எடுத்துள்ள சில நடவடிக்கைகளால், பிரித்தானியாவுக்கும் சில பாதிப்புகள் ஏற்பட உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

ட்ரம்ப் பதவியேற்றதும் கையெழுத்திட்ட முதல் ஆவணங்களில் ஒன்று, பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவது குறித்ததாகும்.

ஆக, அமெரிக்கா பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவது பிரித்தானியாவை குறைமதிப்புக்கு உட்படுத்துவதற்காக ட்ரம்ப் எடுத்துள்ள நடவடிக்கை என்கிறார் சர்வதேச அரசியல் நிபுணரும், லண்டன் பல்கலை பேராசிரியருமான இந்தர்ஜீத் பார்மர்.

அமெரிக்காவுடன் பிரித்தானிய மருத்துவ அமைப்பான NHS செய்துகொள்ளும் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தால், மருந்துகள் விலை அதிகரிக்க இருப்பதுடன், தனியார் அமைப்புகள் பல மருத்துவ அமைப்பை கட்டுப்படுத்தும் ஒரு நிலை உருவாகலாம் என்கிறார் பேராசிரியர் பார்மர்.

ராணுவத்துக்காத அதிகம் செலவிடவேண்டுமென ட்ரம்ப் வற்புறுத்துவதால், பிரித்தானியா உக்ரைனுக்கு கூடுதல் நிதி உதவி செய்ய கட்டாயப்படுத்தப்படலாம்.

மேலும், உக்ரைனுக்கான நிதி உதவியை ட்ரம்ப் நிறுத்துவதாலும், பிரித்தானியா உக்ரைனுக்கு கூடுதல் நிதி உதவி வழங்கும் நிலை உருவாகலாம்.

அதனால், உள் நாட்டின் தேவைகளுக்காக லேபர் அரசு செலவிட திட்டமிட்டிருந்த நிதி மற்றும் முதலீடுகள் பாதிப்புக்குள்ளாகலாம் என தான் கருதுவதாகத் தெரிவிக்கிறார் Bowdoin பல்கலை பேராசிரியரான Andrew Rudalevige.

சமீபத்தில் பிரித்தானிய சேன்ஸலரான ரேச்சல் ரீவ்ஸ், பிரித்தானியாவுக்கு முதலீடுகளைக் கொண்டுவரும் நோக்கில் சீனாவுக்குச் சென்றிருந்ததை சிலர் அறிந்திருக்கலாம்.

ஆக, பிரித்தானியா சீனாவுடன் நெருங்கிய உறவு வைத்துக்கொள்ள முயற்சிக்கிறது. ஆனால், ட்ரம்ப் சீனாவிடமிருந்து விலகியிருக்க விரும்புவதுபோல் தெரிகிறது.

அத்துடன், அவர் பிரித்தானியாவையும் சீனாவிடமிருந்து விலகியிருக்க வற்புறுத்தலாம் என்றும், தடைகளும் வரிகளும் விதிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் சீனா பிரித்தானியா உறவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும், வரிகள் காரணமாக, ஒரு வர்த்தகப் போர் உருவாகலாம் என்றும், அதற்குள் பிரித்தானியாவும் இழுக்கப்படலாம் என்றும் அச்சம் தெரிவித்துள்ளார் பேராசிரியர் Rudalevige.

Share
தொடர்புடையது
14 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026 ஜனவரியில் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 6.8 பில்லியன் டொலராக உயர்வு!

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான இலங்கையின் பொருளாதார நிலவரம் குறித்த அறிக்கையை இலங்கை மத்திய...

12 3
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் புதிய அரசியலமைப்பு முயற்சி: 30 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவின்றித் தொடரும் பயணம்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி, பல...

11 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மகளின் நினைவாக இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4.5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய தந்தை!

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் காணியற்ற ஏழைக் குடும்பங்களுக்காக, தனது 16 வயது மகளின் நினைவாக...

10 4
உலகம்செய்திகள்

ஈரான் மீதான கூட்டுத் தாக்குதல்: பதற்றத்தைக் குறைக்க இந்தியா வலியுறுத்தல்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரானில் உள்ள ராணுவத் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ள...