பாகிஸ்தானில் இன்று (20) காலை நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாகத் தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
இலங்கை நேரப்படி இன்று காலை 10:07 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.1 மெக்னிடுயிட்டாக (Magnitude) பதிவாகியுள்ளது. நிலநடுக்கமானது கடல் மட்டத்திலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் வீடுகள் மற்றும் கட்டடங்கள் லேசாக அதிர்ந்தன. இதனால் பொதுமக்கள் மத்தியில் ஒருவித அச்சம் ஏற்பட்ட போதிலும், உயிரிழப்புகளோ அல்லது பாரிய சொத்துச் சேதங்களோ ஏற்பட்டதாக இதுவரை எவ்வித அதிகாரபூர்வ தகவல்களும் வெளியாகவில்லை.
பாகிஸ்தான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகள் (இந்து குஷ் மலைத்தொடர்) அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படக்கூடிய அபாய மண்டலங்களாகக் கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.

