france
செய்திகள்உலகம்

ஒரே நாளில் 30 ஆயிரம் தொற்றாளர்கள்! – 6 ஆயிரம் வகுப்பறைகளுக்கு பூட்டு

Share

பிரான்ஸில் கடந்த 24 மணித்தியாலங்களில் 30 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் என்ற தகவலை சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரன் இன்று நாடாளுமன்றத்தில் வெளியிட்டிருக்கிறார்.

கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்களது கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கடந்த கோடை விடுமுறை காலத்துக்குப் பிறகு எதிர்பாராத உச்ச அளவு இது என்றும் நாட்டில் ஐந்தாவது வைரஸ் தொற்று அலை தோன்றியிருப்பதை இந்த எண்ணிக்கை வெளிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

பொதுச் சுகாதாரப் பகுதியினர் வெளியிட்டிருக்கும் தரவுகள் கடந்த ஒரு நாள் தொற்று எண்ணிக்கை 30,454 என்று தெரிவித்துள்ளன. இதேவேளை, கல்வி அமைச்சர் வெளியிட்டிருக்கின்ற தகவலின்படி தொற்றுக் காரணமாக நாடெங்கும் சுமார் ஆறாயிரம் வகுப்பறைகள் இதுவரை மூடப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக பாடசாலைகளில் தொற்று அதிகரித்துவருவதை கல்வி அமைச்சு உறுதிப்படுத்தி உள்ளது.

நாடு வைரஸின் ஐந்தாவது அலையைச் சந்தித்திருப்பதால் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் வழங்குவதை வயது வரம்பு இன்றி வளர்ந்தோர் அனைவருக்கும் விரைவாக முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்குமாறு சுகாதாரத் தரப்புகளில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

வரும் நத்தார் திருநாளை அண்மித்த நாட்களில் நாட்டின் மருத்துவமனைகள் நோயாளர்களால் அழுத்தங்களைச் சந்திக்க வேண்டிவரலாம் என்று சுகாதாரஆலோசனைகளை வழங்குகின்ற அறிவியலாளர் குழு கணிப்பிட்டுள்ளது.

இதேவேளை, பிரதமர் ஜீன் காஸ்ரோ தொற்றுக்கு இலக்கானதை அடுத்து அவரோடு தொடர்புபட்டிருந்த காரணத்துக்காக சிரேஷ்ட அமைச்சர்கள் பத்துப் பேருக்கு வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. எவருக்கும் தொற்று ஏற்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

தீவிரமான பரவலை நாடு எதிர்கொண்டுள்ள நிலையில் நாட்டின் சுகாதாரப் பாதுகாப்புச் சபையின் கூட்டம் இன்று புதன் கிழமை அதிபர் எமானுவல் மக்ரோன் தலைமையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#World

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...