download 15 1 3
உலகம்செய்திகள்

ஆபாசமாக புகைப்படம் எடுத்தால் 3 ஆண்டுகள் சிறை!

Share

ஆபாசமாக புகைப்படம் எடுத்தால் 3 ஆண்டுகள் சிறை!

பாலியல் வன்முறை மற்றும் பாலியல் வல்லுறவிற்கு  எதிரான நடவடிக்கையை ஜப்பான் அரசு தீவிரமாக்கி வருகின்றது.

திருமணம் செய்வதற்கான  வயதை அதிகரித்தல்,  பாலியல் வல்லுறவு பற்றிய வரையறையை மறுசீரமைப்பது மற்றும்  தண்டனையை கடுமையாக்குவது போன்ற  பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகின்றது.

வளர்ச்சியடைந்த நாடுகளில் திருமணத்துக்கான உரிய வயது ஜப்பானில் மிகவும்  குறைவாகவே காணப்படுகின்றது.  ஜி7  நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவாகவும்.

2019 இல்  அதிகளவான  பாலியல் குற்றங்களில், குற்றங்களை நிரூபிக்க முடியாததைக்  கண்டித்து, அங்கு மிகப் பெரிய எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால், பாலியல் குற்றங்களுக்கு எதிரான ஒரு சீர்திருத்தத்தினை  அந்நாடு மேற்கொண்டு வர தீர்மானித்துள்ளது.

அந்த வகையில், அதன் ஒரு அங்கமாக , மற்றவர்களின் முறையான அனுமதியின்றி பாலியல் மோகத்துடன் புகைப்படங்கள் மற்றும்  வீடியோக்களை எடுப்பதற்கு  தடை விதிக்கும் மசோதாவை ஜப்பான் நாடாளுமன்றம்  கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

பாலியல் மோகத்தை தூண்டும்  புகைப்படங்களால் எண்ணற்ற குழந்தைகளும், பெண் விளையாட்டு வீரர்களும், விமானப் பணி பெண்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனால்,  பாலியல் இச்சையைத் தூண்டக்கூடிய வகையில் புகைப்படம் எடுப்பதை இச்சட்டம் தடை செய்கின்றது.

ஒரு பெண் உடை மாற்றும் செய்கின்ற பொழுதோ  அல்லது பாலுறவில் இருக்கும் பொழுதோ  அவரை ரகசியமாக படம் பிடிப்பதும்  குற்றமாக கூறப்பட்டுள்ளது.

குறித்த சட்டத்தின் மூலம் குற்றவாளிகளுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது 3 மில்லியன் ஜப்பானிய யென் (£17,500; $22,000) வரை அபராதம் விதிக்கப்படும் என்பதுடன்  இந்த ஆண்டு ஜூன் மாதம் சீர்திருத்தங்கள் நிறைவேற்றப்படும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

 

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...