rtjy 89 scaled
உலகம்செய்திகள்

காசாவில் போர் நிறுத்தம்

Share

காசாவில் போர் நிறுத்தம்

காசாவில் 3 நாள்களுக்கு மனிதாபிமான போர் நிறுத்தம் மேற்கொள்ள பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேல் இராணுவத்துக்கும் இடையிலான போரை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றன.

இந்நிலையில், வடக்கு காசாவில் இருந்து பாலஸ்தீனிய குடிமக்கள் வெளியேற அனுமதிக்கும் வகையில் தினசரி நான்கு மணிநேரம் சண்டையை நிறுத்த இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை கூறுகிறது.

ஹமாஸிடம் உள்ள 10-15 பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவதையடுத்து அதற்கு பதிலாக காசாவில் 3 நாள்களுக்கு மட்டும் போரை நிறுத்திவைக்க அமெரிக்கா, கத்தார், எகிப்து உள்ளிட்ட நாடுகள் இதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், காசாவிற்கு உணவு, எரிபொருள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளை வழங்குவது குறித்தும் இந்த பேச்சுவார்த்தையில் முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

பாரிஸில் மேற்கு மற்றும் அரபு நாடுகள், ஐக்கிய நாடுகள் சபை, அரசு சாரா அமைப்புகள் இணைந்து காசாவிற்கு எவ்வாறு எந்த வகையான உதவிகளை வழங்குவது என்பது குறித்து ஆலோசனை செய்துவருகின்றன.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....