24 மணி நேரத்தில் 2,000 பேருக்கு கொரோனாத் தொற்று!!
கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றால், கடந்த 24 மணித்தியாலத்தில் 2 ஆயிரத்து 405 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 25ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14 லட்சத்து 49 ஆயிரத்து 851 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 26 ஆயிரத்து 698 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 16 ஆயிரத்து 105 பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 212 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 14 லட்சத்து ஏழாயிரத்து 48 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
Leave a comment